என் மலர்
நீங்கள் தேடியது "300 ஆண்டு"
- கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு
- பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,
கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,
பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ
சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ சாயிகள் பதிவு
- பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,
கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,
பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ
சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- பல சினிமாக்களில் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றும் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும்.
- போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். நகை தொழிலாளி. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து நகை தொழில் செய்து வருகிறார். நேற்று இவரது வீட்டுக்கு 4 பேர் சென்றனர்.
அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சயிடம் வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி தங்களின் அடையாள அட்டையை காட்டினர்.
இதையடுத்து அவர்கள் சஞ்சய் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 300 கிராம் தங்கம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1.80 லட்சத்தையும் எடுத்து கொண்டனர்.
கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து ஆதாரங்களை காட்டி பணத்தையும், நகையையும் பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் போகும் போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவின் டிஸ்குகளையும் எடுத்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த சஞ்சய் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து விசாரணை நடத்திய பின்னரே சஞ்சய் வீட்டுக்கு வந்தவர்கள் கொள்ளை கும்பல் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்- சிறுமிகள் 300 பேர் அமெரிக்காவுக்கு கடத்தி விற்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் நடிகை பிரீத்தி சூட் சில நாட்களுக்கு முன் அங்குள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.
அப்போது அங்கு 2 சிறுமிகள் இருந்தனர். சிலர் அந்த பியூட்டிபார்லர் வந்து அங்கிருந்த 2 சிறுமிகளுக்கும் மேக்கப் போட்டு விடுமாறு கூறினர். அதன்படி 2 சிறுமிகளுக்கும் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தனர். இதை கவனித்த நடிகை பிரீத்தி சூட் அந்த சிறுமிகளிடம் எதற்காக மேக்கப் போடுகிறீர்கள்? சினிமாவில் நடிக்கப் போகிறீர்களா? என்று கேட்டார்.
ஆனால் 2 சிறுமிகளும் நாங்கள் அமெரிக்கா போகிறோம் என்றனர். அவர்களுடன் வந்த ஆட்கள் உடனே குறுக்கிட்டு அமெரிக்காவில் அவர்களது பெற்றோர் இருக்கிறார்கள் என்றனர். இதனால் சந்தேகம் அடைந்த நடிகை பிரீத்திசூட் ரகசியமாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதை அறிந்ததும் 2 சிறுமிகளையும் விட்டுவிட்டு உடன்வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அங்கு வந்து 2 சிறுமிகளையும் மீட்டனர்.
சிறுமிகளிடம் விசாரித்த போது அவர்கள் குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர்களது பெற்றோர் கடத்தல் கும்பலிடம் இருவரையும் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தை கடத்தல் கும்பல் பற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அமெரிக்காவுக்கு செல்வதாக கூறியதால் குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தி விற்கும் கும்பலின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் இதில் முக்கிய குற்றவாளியான ரஜுபாய் கேம்லிவாலா என்பவன் மும்பை விமான நிலையத்தில் சிக்கினான். அவன் உடனடியாக மும்பை போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
பிடிபட்ட கடத்தல்காரனுக்கு 50 வயது ஆகிறது. இவன் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் இவன் சிறுவர்- சிறுமிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் இதுவரை 300 குழந்தைகளை கடத்தி இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. பெரும்பாலான சிறுவர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாகவும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.45 லட்சம் பேரம் பேசி விற்றதாகவும் போலீசில் கூறியுள்ளான்.
சிறுவர் கடத்தலில் மும்பை மட்டுமல்லாது அமெரிக்காவைச் சேர்ந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. அமெரிக்காவில் இருந்துதான் எத்தனை சிறுவர்-சிறுமிகள் தேவை என்ற விவரம் ரஜுபாய் கேம்லி வாலாவுக்கு தெரிவிக்கப்படும். உடனே அவன் தனது ஆட்கள் மூலம் ஏழைக் குடும்பத்தினரை தேடிப் பிடித்து அவர்களிடம் பேசி பண ஆசை காட்டுவான். பணத்துக்கு மயங்கும் பெற்றோரை மயக்கி சிறுவர்- சிறுமிகளை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுவான்.
அவர்களை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று லட்சக்கணக்கில் விலை பேசி விற்று விடுவான். கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கடத்தப்படும் சிறுவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்றவற்றை போலியாக எடுத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சிறுவர்கள் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மேக்கப் போட்டும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவித்தும் வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளைப் போல் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுவர் கடத்தல் தொடர்பாக மும்பை வெர்சேவா போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் அமீர்கான், தாஜுதீன் கான், அப்சல்சேக், ரிஸ்வான் சோதானி.
கடத்தப்பட்ட சிறுவர்- சிறுமிகள் அமெரிக்காவில் வீட்டு வேலைக்கும், விபசாரத்துக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருவதுடன் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கைதாகியுள்ள ரஜுபாய் கேம்லிவாலாதான் இந்த கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளான். இவன் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் கில்லாடி.
கடந்த 2007-ல் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைதானான். அதன் பிறகு சிறுவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளான். கைதான 5 பேர் மீதும் சிறுவர்கள் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் இக்கரைபோளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கு 300 வருட பழமையான ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் பஸ் நிறுத்தம், கடை, மேடை உள்ளது. இதனை அங்குள்ள பொதுமக்கள் ஊரின் நினைவு சின்னமாக கூறி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த ஞாயிறு இரவு 7 மணிக்கு ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஊர்ப்பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விழுந்து கிடந்த மரத்தை பார்த்து கதறி அழுதனர். மரத்தை வெட்டி அகற்ற 2 நாட்கள் ஆனது.
300 ஆண்டுகளாக தங்களோடு தங்கள் மூதாதையர்களோடும் வாழ்ந்த மரத்திற்கு இறுதி சடங்கு நடத்தினர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அந்த பகுதி முழுவதும் ஒட்டினர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் இதனை பார்த்து நெகிழ்ந்தனர்.
இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.
அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.
அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சுவிஸ் நேஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நேஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நேஷனல் பாங்க் அறிவித்துள்ளது.
40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
