search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித் ஷா"

    • பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.
    • ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுல்தான்பூர்:

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே இன்று (ஜூலை 26-ந்தேதி) விசாரணைக்கு வரும்போது ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் ஆஜரானார்.

    விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.
    • தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

    நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொண்டவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று கூறினார்.

    • 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது.
    • 1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார்.

    அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.

    1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.

    அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

    வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
    • பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். தற்போது தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் காங்கிரஸ் தலையாமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தைப் பிடித்த நிலையில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக சறுக்களை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். உள்ளடியாக சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்து பாஜக மேலிடத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    • வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.
    • இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் அந்த முடிவையே எடுத்திருப்பார்.

    முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளானது அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

    தேர்தல் பிரகாரங்களில், பாராளுமன்றத்திலும் 50 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி காங்கிரஸை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதன் உச்சமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    'அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைத்தனத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.

    இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார்.வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ் பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது' என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

    • சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.
    • வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜக தேசிய தலைமை, ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தலைமையில் நேற்றிரவு ஆலோசனை நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு மாநில தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளதாக இந்தியா டூடே செய்தி வெளியிட்டுள்ளது.

    90 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்றும் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது என்றும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019-ல் ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக 2018 நவம்பரில் மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர். மாநிலத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய மிகப்பெரிய அளவிலான நிகழ்ச்சிகளையும் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தனர்.

    இரண்டு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் கட்சியின் எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் பிற உயர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
    • சந்திரபாபு நாயுடு பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

     போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார்.

    அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது கிடையாது
    • நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

     

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்தது. டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.

    அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் அவரை மன்னித்து அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் எனவே புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது  கிடையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

     

    மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின்கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்துக்காக ஒருவர் மீது பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    பாரதிய நியாய சன்ஹிதா [பி.என்.எஸ்] சட்டத்தின்கீழ் முதல் வழக்காக ஹைதராபாத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம்   ஒ ஓட்டியதாக இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள்.
    • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல- ராகுல் காந்தி

    இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, "தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல. கடவுள் பரமசிவன் படத்தை காட்டி அச்சமின்றி தைரியமாக இருப்பது, அகிம்சை குறித்து பேசினார். மற்ற மதங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன" என்றார்.

    இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வகளை இந்த கருத்து புண்படுத்துவதாகவும், இதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறும் வலியுறத்தினார்.

    மேலும் எமர்ஜென்சி, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அமித் ஷா, நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பியபோது, அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என்றார். கடவுள் சிவன் படத்தை காட்டியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா இதுபோன்ற படங்களை காட்டுவதற்கு மக்களவையில் அனுமதி கிடையாது என சுட்டிக்காட்டினார்.

    • நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள்.
    • ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள்.

    நீட் தொடர்பாக ஒருநாள் முழுவதும் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், சபாநாயகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கிடையே இந்து மதம் குறித்து ராகுல் காந்தி கூறியதும், பிரதமர் மோடி அதற்கு பதில் அளித்ததும், பாஜக எம்பி-க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்களவை அதிர்ந்தது.

    ராகுல் காந்தி பேசும்போது "நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்றார்.

    இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவை சில நிமிடங்கள் அமளியாக காணப்பட்டது.

    • தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.
    • முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

    இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கூறியதாவது:-

    நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

    புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக சந்தேகம் (கவலை எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள்) எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசியலை தாண்டி அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 12 ஆயிரம் அதிகாரிகள் 22.5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்க தயார் செய்யப்பட்டுள்ளனர்.

    தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.

    மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் நவீன குற்றவியல் நீதி அமைப்புக்கு வழிவகுக்கும்.

    77 வருட சுதந்திர காலத்திற்குப் பிறகு சுதேசி முழுமை பெற்றுள்ளது. இந்தியாவின் நெறிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

    முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு மோடி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், 'ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களில் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துளீர்கள். உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுகூறப்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை இந்திய வீரர்களுக்கு தொலைபேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மோடி.

    இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், 'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழல்களில் தளராத மன உறுதியுடன் ஆட்டம் முழுதும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது ஒரு சிறந்த வெற்றி' என்று தெரிவித்துள்ளார்.

    எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், 'இந்திய அணி தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சூர்யா, என்ன ஒரு அருமையான கேட்ச், ரோகித், இது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி, ராகுல், இனி உங்களின் வழிகாட்டுதலை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும், மென் இன் ப்ளூ [இந்திய வீரர்கள்] நீங்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடருடன் டி20 யில் ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கும் நீங்கள் வாழ்த்து தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், 'இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள், குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் தனித்துவமாக விளையாடினார்கள். ஒவ்வொரு இந்தியனும் இந்த வெற்றியை நினைத்து பெருமைப் படுகின்றனர். உங்களின் சாதனைகள் என்றென்றும் கொண்டாடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்து செய்தியில், 'இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தருணம் இது, தொடர் முழுவதும் அணி வீரர்கள் குழுவாக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தேசம் உங்களின் இந்த வரலாற்று வெற்றியால் பூரிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்து செய்தியில், 'இந்த வெற்றி வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மொத்த நாடும் இந்த வெற்றியால் உச்சத்துக்கு சென்றுள்ளது. அணி வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ , தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    ×