என் மலர்
ஆன்மிகம்
- தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
- முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது.
கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை
முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
"தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், "இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.
இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். குங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.
விரதமுறை
வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும். இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.

கருட புராணம்
முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது. இதைப் பற்றி விவரமாக அறிய கருட புராணத்தை கோவில் அல்லது பொது இடங்களில் அமர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம். கருட புராண புத்தகம் 19 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கியது. கடைசி அத்தியாயத்தில் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலையைப் பற்றிய தகவல்களும், அவரவர் செய்த வினையின் அடிப்படையில் சொர்க்க மற்றும் நகர உலக பலன் போன்ற செய்திகளும் அடங்கி உள்ளன. குறிப்பாக இந்து தர்மத்தில் ஓர் உயிர் மனித உடலை விட்டுப் பிரிந்த நேரத்தில் வீட்டில் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புராணமாக கருட புராணம் சொல்லப்பட்டுள்ளது.
பண வரவுக்கு கருட பஞ்சமி விரதம்
கருட பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும். முதலில் விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்கும். அதனை கண்டு தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். இப்படி செய்தால் பண வரவுக்கு பஞ்சமே இருக்காது.
பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கருட பஞ்சமி விரத தினமாகும்.
பலன்கள்
* கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு.
* கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
* கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
* திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
* செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
* புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
* வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
* வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
- கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.
- புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது.
108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 24-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (28-ந்தேதி, திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.
காலை 9.30 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சுகபுத்ரா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.
அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.
- ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திரம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-12 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : பூரம் இரவு 8 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று சதுர்த்தி விரதம். திருவாடிப்பூரம். ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் பெருந்தேரில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-வரவு
கடகம்-நலம்
சிம்மம்-களிப்பு
கன்னி-லாபம்
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- நன்மை
மகரம்-சுகம்
கும்பம்-சுபம்
மீனம்-பெருமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
அலைச்சல் கூடும் நாள். உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிக பணிச்சுமையை வழங்குவர்.
கடகம்
விரயங்கள் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.
சிம்மம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். எதிரிகளின் பலம் குறையும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கன்னி
அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
துலாம்
நிதி நிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் காசோலை சம்பந்தமாக கவனம் தேவை.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மகரம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும்.
கும்பம்
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.
மீனம்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
- ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது.
- ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27-ந்தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28-ந்தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.
ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.
ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். .
ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
- ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
- ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.
ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.
ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.
இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவ்வாரு பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள்.
ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.
ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-11 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை நள்ளிரவு 12.43 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : மகம் இரவு 6.54 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சி காமாட்சியம்மன், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் முளைக்கொட்டு விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-பயணம்
மிதுனம்-முயற்சி
கடகம்-ஆதாயம்
சிம்மம்-தாமதம்
கன்னி-பரிசு
துலாம்- வரவு
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- போட்டி
மகரம்-அனுகூலம்
கும்பம்-பொறுமை
மீனம்-நன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். கட்டிடப் பணி தொடரும்.
ரிஷபம்
தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
மிதுனம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோக முயற்சிக்கு அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
முயற்சி கைகூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
துலாம்
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். வரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் வருமானம் உயரும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
தனுசு
வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் ஓய்வின்றி உழைத்துப் பலனில்லையே என்று நினைப்பீர்கள்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கூட் டாளிகள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்ள மாட்டார்கள். விரயங்கள் கூடும். வாகனப் பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள்.
கும்பம்
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். பாராட்டும் புகழும் கூடும். நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
மீனம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறக் கையிருப்பைக் கரைக்க நேரிடும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.
- அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும்.
- இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
அல்லாஹ்வின் தன்மைகளில் முதன்மையான ஒன்று இரக்கம். அல்லாஹ்வின் இரக்கம் எப்படி இருக்கும்? தவறுகள் செய்து நரகம் சென்றவன் சுவனம் செல்ல துடிக்கும்போது அல்லாஹ் எப்படி நடந்து கொள்வான்? இது குறித்து நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.
(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும் விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார்.
அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா" என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.
பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா" என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.
பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான்.
அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!" என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார். "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
பெரு பாவங்கள் செய்பவர்களே நரகம் செல்வார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசுகிறான். ஆனால், மேற்கண்ட நபிமொழியில் நரகத்தில் இருப்பவனைச் சுவனம் கொண்டு வருகிறது அல்லாஹ்வின் இரக்கம்.
அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும். இத்தன்மையே நாளை மறுமையில் நம்மைத் தலைநிமிரச் செய்யும். மேலும் அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இறைவனிடம் இருந்து சுவனத்தை பரிசாகப் பெறுவோம்.
- ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.
இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் செய்து வருகிறனர்,
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏ.டிஎஸ்.பி.கள் 1 ஏ.எஸ்.பி., 5 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.
- மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது.
திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, திருவெள்ளறை திருத்தலம். இந்த ஆலயத்தின் நேர்பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. 'ஸ்வஸ்திக்' வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த கிணறு ''மார்பிடுகு கிணறு'' என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஸ்வஸ்திக் கிணறு கி.பி. 8-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிழக்கு பக்கவாசலின் முதல் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படி நிலையில் யானை வாகனத்தோடு அய்யனாரும், பூரணாம்பிகையும், மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப்பறவைகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் தெற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படிநிலையில் கொற்றவை, சிங்கம் மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம் படிநிலையில் விநாயகரின் உருவம் உள்ளது.
மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில் சிவபெருமான்- பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக்காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைப்படியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்து வரும் சிற்பம் இருக்கிறது. கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கி செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
- ஆழ்வார்திரு நகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-10 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை நள்ளிரவு 12.36 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 6.11 மணி வரை பிறகு மகம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
இன்று சந்திர தரிசனம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். இரவு வெள்ளி குதிரை வாகன பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் குதிரை வாகனத்தில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் திருவீதி உலா.
ஆழ்வார்திரு நகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-பரிசு
கடகம்-நன்மை
சிம்மம்-வெற்றி
கன்னி-ஆர்வம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- வரவு
மகரம்-நலம்
கும்பம்-பக்தி
மீனம்-பாராட்டு






