என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 23.09.2025
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். வரன்கள் வாயில்தேடி வரும்.
ரிஷபம்
குறைகள் அகலும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழில் வெற்றி நடைபோடும்.
மிதுனம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களால் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
கடகம்
விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
சஞ்சலங்கள் தீரும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
துலாம்
நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
தனுசு
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அகலும்.
மகரம்
நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். அரசியல்வாதிகளின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம்
தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தி காண வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
மீனம்
பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.






