என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்- இரண்டாவது நாள் இன்று..!
    X

    நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்- இரண்டாவது நாள் இன்று..!

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    இரண்டாவது நாள் போற்றி பாடல்:

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகில் இருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!

    Next Story
    ×