என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் வாபஸ் பெறப்பட்டன.
    • பக்ரம் விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, அந்த விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அதெரிவித்தார்.

    இந்நிலையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா அணுகுண்டு செய்யும் இடத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள ஊர் பக்ரம். என தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
    • அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    தென் அமெிரக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தின் எதிரொலியால், சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • மனிதாபிமான உதவிப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதித்துள்ளது.

    2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. பின்னர் நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. சுமார் 13 மாதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

    கடந்த ஜனவரி 20ஆம் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருந்த நிலையில் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் மனிதாபிமான உதவிப்பொருட்கள் காசாவிற்கு எடுத்துச்செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    ஏழு வார போர் நிறுத்தம் நிறைவடைந்ததும் மேற்கொண்டு போர் நிறுத்தம் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. தங்களது பாதுகாப்பு வளையத்தை விரிவுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் எனத் தெரிவித்தது. மேலும் காசா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்தது. மேலும் உதவிப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதித்தது. இதனால் காசா மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் காசாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மால்டா அரசு தெரிவித்துள்ளது. மால்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் இருந்தனர். அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மால்டா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோன்று காசாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல்- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அறிவிப்பு நிஜமான வேலைவாய்ப்பு தான் என்றும், சம்பள விகிதத்தில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை எனவும் நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் உயர்தர வாழ்க்கைதரம், பணியாளர் மதிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் செல்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு பேசிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்நிலையில் துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தற்போது வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவித்த அறிவிப்பு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த பதவிக்கு இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிஜமான வேலைவாய்ப்பு தான் என்றும், சம்பள விகிதத்தில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை எனவும் நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது.

    இந்த வேலைவாய்ப்பு துபாய் மற்றும் அபுதாபியை சேர்ந்த 2 வி.ஐ.பி. குடும்பங்களுக்கு ஆகும். இந்த பணியில் சேருபவர்கள் வீட்டு பணியாளர்களை மேற்பார்வையிட வேண்டும். வீட்டு பராமரிப்பு பணிகளை ஒழுங்குபடுத்துதல், செலவு திட்டம் மற்றும் நிதி நிர்வாகம், குடும்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் உயர்தர வீட்டு நிர்வாக அனுபவமுள்ளவர்கள் மற்றும் பல வேலை அழுத்தங்களுக்கு இடையிலும் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் உயர்தர வாழ்க்கைதரம், பணியாளர் மதிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
    • பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.

    ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது.

    இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

    முன்னதாக நேற்று, வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு பாகிஸ்தான் எல்லையை மூடியது. இதனால் பாகிஸ்தானியர்கள் வெளியேற முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தனர். பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில் 24 மணி நேரம் மவுனத்திற்கு பிறகு பாகிஸ்தான் தற்போது தங்கள் எல்லையை மீண்டும் திறந்துள்ளது. இதன்மூலம் எஞ்சியுள்ள பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. 

    • 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
    • எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார். 

    கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    • அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
    • பிரதமர் மோடிக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு.

    கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் பாட்காஸ்ட் நேர்காணலில் பேசிய ஜேடி வான்ஸ், "இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பரந்த பிராந்திய போருக்கு வழிவகுக்காத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.

    மேலும், வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தான், அவர்கள் பொறுப்பேற்கும் அளவிற்கு, தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸும் இந்த சம்பவம் குறித்து பதிலளித்தார். "பிரதமர் மோடிக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. இந்த நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார். 

    • அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார்.
    • அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

    அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும்.

    உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.

    உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.

    கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த சந்திப்பின் போது வாக்குவாதம் வெடித்தது.

    அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது.

    அதுமுதல் ரஷியாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தார். ஆனால் கடந்த வாரம் வாடிகனில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் வைத்து டிரம்ப், ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த வாரம் உக்ரைனில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை விமர்சித்தார்.

    இந்நிலையில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

    • ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள்.
    • மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் இயன்ற எல்லா வழிமுறைகளிலும் பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், பள்ளிகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே சூழலில் காசாவுக்குள் எந்த உணவும், உதவிப் பொருட்களும் செல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பான புகாரில் சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிறுவனம் காசாவில் செயல்படுவதைத் தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறியிருக்கிறார்.

    அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள்.

     இதற்கிடையில் மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  

    எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின் பட்டினியை போக்க காசா மக்கள் கரையொதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு இஸ்ரேலின் அடுத்த வான்வழித் தாக்குதல் எங்கு எப்போது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

    அல் ஜசீரா செய்தியின்படி. மீனவர் அப்துல் ஹலீம் கூறுகையில், கடல் ஆமைகளை சாப்பிடுவது பற்றி தான் ஒருபோதும் யோசித்ததில்லை என்றும், வேறு வழியில்லை என்பதால் மட்டுமே அவற்றை சாப்பிடுவதாகவும் கூறுகிறார்.

    "குழந்தைகள் ஆமையைப் பார்த்து பயந்தார்கள்... அதன் இறைச்சி சுவையாக இருப்பதாக நாங்கள் அவர்களிடம் சொன்னோம்," என்று காசாவைச் சேர்ந்த மஜிதா கானன் கூறினார்.   

    • PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.
    • சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.

    பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார்.

    இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார். 

    • நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
    • லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

    இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.

    காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.

    புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.

    லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார். 

    • புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
    • துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என்றது அதிபர் மாளிகை.

    சியோல்:

    தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார். இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராஜினாமா குறித்து ஹான் டக்-சூ கூறுகையில், எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

    ×