என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
- 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
* 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.
* தி.மு.க. அரசு கொண்டு வந்த மாடல் பள்ளிகளால் ஐ.ஐ.டி.யில் மாணவிகள் பயில்கின்றனர்.
* கடந்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுள்ளது.
* 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை தி.மு.க. அரசு மாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
- தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.
கோவை:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கால முறை ஊதியம், 10 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடம் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3-ந் தேதி முதல் தொடர்ந்து மறியல் போராட்டம், கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என பல்வேறு வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பிணம் போல் தரையில் படுத்தும். அவர்களின் பக்கத்தில் சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நாங்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
சட்டசபை கூட்டத்தொடரில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையாக வைக்கலாம். தி.மு.க. கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்கிறார்கள். எனவே தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கலெக்டரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமில்லாத செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
- மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.
* நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
* தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரம் போல் உள்ளது இந்த பாராட்டு விழா.
* கிராமப்புறங்களில் பள்ளி முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனை புதுமைப்பெண் திட்டம் மாற்றியது.
* புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.
- இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.
சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
* பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
* இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.
* இறந்த கோழியை உண்ண வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
- ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.
மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?
சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?
தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?
போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.
இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…
இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?
அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?
இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.
பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.
விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.
- 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
- கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.
சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-
13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.
இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார்.
- கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
- கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சி முகாமும் டெல்லியில் நடக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. அடுத்து விழுங்க போக இருக்கிற கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி பழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம்.
அ.தி.மு.க. கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18-ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
பா.ம.க.வை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சினைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அதுபோல் எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.
நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேசவிட மாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்க்ள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது.
- தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஊட்டி:
உலகெங்கும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்த பின்பு இந்தியாவிலும் காதலர் தினத்தை இளசுகள் வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
காதலர்கள் பலரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மலைம மாவட்டமான நீலகிரியில் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள விடுதிகளில் தற்போது முன்பதிவுகளும் தொடங்கி விட்டது.
அவ்வாறு வரும் காதலர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலிகளுக்கு தங்களது காதலிகளுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.
அத்துடன் பல்வேறு விதமான ரோஜா மலர்கள், கொய்மலர்களையும் தங்களது காதலிகளுக்கு பரிசாக வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேசமயம் கொய்மலர்கள் நீலகிரியிலேயே தாராளமாக கிடைக்கிறது. இதனால் அதனை வாங்கி பலரும் பரிசாக கொடுக்க தொடங்கி விட்டனர். வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே மலர்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.
சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதேபோன்று கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உள்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிகளை காண முடியும்.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார்.
- இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி, பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் இருந்து ¼ கிலோ கஞ்சா மற்றும் சிகரெட்டுகள், பணத்தை வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்தார். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார். இது தொடர்பாக இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி மாணவரிடம் கஞ்சா எப்படி வந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். மாணவ சமுதாயத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் எனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
- பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.
சாலை சரியில்லை என கேட்கிறார்கள். சாலை அமைத்து கொடுத்தால் வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள், அதனால் விபத்து நடக்கிறது. அதில், இறந்து போய் விடுகிறார்கள். உடல் நிலைதான் முக்கியம். 2026-2031 ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும், நீங்கள் மீண்டும் முதல்வராக வருவீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன். செயல்படுபவர் தான் அமைச்சராக இருக்க வேண்டும்.
ஏன் என்றால் என்னுடைய துறையில் 108 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. நிர்வாகத்தில் பல விதம் உள்ளன. வளர்ந்து வந்த இயக்கமாக தி.மு.க. உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா, சொன்னால் கோபித்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் கூட்டணியில் உள்ளார்கள்.
காங்கிரசில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். சிறு துளி, பெருவெள்ளம் என்பது போல, வளர்ந்து வந்த கட்சிதான் தி.மு.க., கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? இந்த தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்பதை செய்து கொடுப்போம். திராவிட இயக்கத்தை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.
நேற்றுமுன்தினம் கூட நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம், போய் நிற்கிறோம்.
எந்த கூட்டணி என்றாலும் சரிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. தனியாக நிற்கவேண்டும் என்றாலும் ரெடி. ப.சிதம்பரம் ஜெயித்த வழக்கு என்னாச்சு என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். ப.சிதம்பரமும் தற்போது நண்பராகி விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
- முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை நாளை ரெயில் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.
முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 3-வது நாள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்கிறது. 10 ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






