என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு.

    அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.

    வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, பல்லையா தெரு 1 முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, சர்மா நகர். 

    • வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES ஆவணப்படம் தயாரித்துள்ளது.
    • வாச்சாத்தி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள்என்று தீர்ப்பளிக்கப்பட்டது

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

    இந்நிலையில், வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த ஆவணப்பட திரையிடலில் கலந்து கொண்ட எம்.பி. கமல்ஹாசன், நீதியை நிலைநாட்டிட 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிய வாச்சாத்தி கிராம மக்களுடன் உரையாடினார்.

    • நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நயினாரின் பேச்சு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வானதி சீனிவாசனம் தெரிவித்தார்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இத்தனிடையே, இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். அவர் எந்த உள்நோக்கத்திலும் பேசியதாக தெரியவில்லை. அவர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ உள்நோக்கத்திடனோ பெண்களை இழிவுபடுத்தா வேண்டும் என்ற எண்ணம் உடையவர் அல்ல. . அவரை விமர்சிக்க திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை"

    • குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பான மாலைமலர் செய்தியை பகிர்ந்து குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இதுபோன்ற செய்திகள் நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இது பெண்களின் சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் பெண்கள் சமூகத்திற்கு ஒரு வலுவான நல்ல செய்தியை அனுப்புகிறது.

    ஒவ்வொரு பெண்ணும் தனக்காக நிற்க வேண்டும், கட்டாயம் நிற்க வேண்டும். கண்ணியம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க, மற்றவர்கள் உங்களுக்காக அதைச் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். ஒரு துளி கூட உங்களை அவமதிக்கக் காத்திருக்கும் அத்தகைய ஆண்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர்.

    உங்கள் தலையை உயர்த்தி நில்லுங்கள், உலகம் உங்களுடன் இருக்கும். இது எனது வெற்றி மட்டுமல்ல, இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. போதும் போதும். ஒற்றுமையாக நின்று அதை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!
    • ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்.

    திருப்பத்தூரில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!

    * 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!

    * ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்

    * நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம்.

    * தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்!

    * நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
    • அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

      இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

      • மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
      • எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம்.

      பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

      என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

      நான் பொது வாழ்விற்கு வந்தபோது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன். ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர்.

      தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

      அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.

      வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.

      நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன்.

      இவ்வாறு பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      • நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
      • மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

      இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அது அவங்க அரசியல்.. என் அரசியல் இல்ல" என்று தெரிவித்தார். 

      • பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது
      • திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.

      1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் நேற்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

      இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

      தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

      பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.

      வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக" என்று தெரிவித்தார்.

      இந்நிலையில், ரூ.5000 உரிமைத்தொகை அளித்தபின் மகளிருக்கு முதலமைச்சர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

      அந்த குறுஞ்செய்தியில், "அன்பு சகோதரிக்கு வணக்கம்! மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்", உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேற்று ரூ.5000 அனுப்பி வைத்துள்ளோம். இதனை உங்கள் அத்தியாவசிய தேவைக்கும், சேமிப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

      ×