ரூ.5000 உரிமைத்தொகை அளித்தபின் மகளிருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய முதலமைச்சர்

பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
ரூ.5000 உரிமைத்தொகை அளித்தபின் மகளிருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய முதலமைச்சர்
Published on

1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் நேற்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ரூ.5000 உரிமைத்தொகை அளித்தபின் மகளிருக்கு முதலமைச்சர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த குறுஞ்செய்தியில், "அன்பு சகோதரிக்கு வணக்கம்! மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்", உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேற்று ரூ.5000 அனுப்பி வைத்துள்ளோம். இதனை உங்கள் அத்தியாவசிய தேவைக்கும், சேமிப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com