என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
இதனை தொடர்ந்து இன்றிரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது.
பஞ்சாப் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்து அசத்தினார். பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய சஞ்சு சாம்சன் இதில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க இருக்கிறார். பேட்டிங்கில் சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டேவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மொத்தத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதையில் பயணிக்க ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும். உள்ளூர் சூழல் பஞ்சாப் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 16 ஆட்டங்களிலும், பஞ்சாப் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. கவுகாத்தியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை 176 ரன்னில் அடங்கியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன் தேவையாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா, டோனி இருந்தும் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்த சென்னை அணி அதில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.
கடந்த ஆட்டத்தின் போது முழங்கையில் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நேற்று லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சென்னை அணிக்கு பின்னடைவாகும். அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டிவான் கான்வே களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் (2, 5, 23 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கின்றனர். இங்குள்ள மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் நூர் அகமதுவின் சுழல் ஜாலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் 163 ரன்னில் ஐதராபாத்தை 'ஆல்-அவுட்' செய்த டெல்லி அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது.
பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங்கில் பாப் டுபிளிஸ்சிஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மிரட்டக்கூடியவர்கள்.
சுழலுக்கு உகந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் அணிக்கு துருப்பு சீட்டாக விளங்குவார்கள் எனலாம். வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர டெல்லி அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) அல்லது டிவான் கான்வே, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாமி ஓவர்டான் அல்லது அன்ஜூல் கம்போஜ், டோனி, ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது.
டெல்லி: ஜேக் பிராசர் மெக்குர்க், பாப் டுபிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன்.
- பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
- 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது.
- நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை என்றார் பாண்ட்யா.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 16வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெறுகிறோம், ஒரு அணியாக நாங்கள் தோற்கிறோம். நான் முழு உரிமையையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்களுக்கு சில ஷாட்கள் தேவைப்பட்டன. திலக் அவற்றைப் பெறவில்லை. கிரிக்கெட்டில் சில நாட்கள் வரும், நீங்கள் முயற்சிக்கும் போது ஆனால் ரன்கள் வருவதில்லை.
நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள், பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள்.
நீங்கள் தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் களத்தில், 10-12 ரன்கள் நாங்கள் அதிகமாகக் கொடுத்தோம். இறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.
எப்போதும் என் பந்துவீச்சை ரசித்தேன். எனக்கு அதிக விருப்பங்கள் இல்லை. நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் தவறுகளைச் செய்ய வைக்க முயற்சிக்கிறேன். இன்று அந்த நாட்களில் ஒன்றாகும். மும்பை அணி மீண்டும் எழுச்சி பெறும் என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும், ரிக்கல்டன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.
நமன் தீர் அதிரடியாக ஆடி 24 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 67 ரன்னில் வெளியேறினார். திலக் வர்மா 25 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
- மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. என்ன தான் லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு இந்த போட்டி முடிந்தபிறகும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவத்தை வைத்து ரிஷப் பண்டை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைக்கு என்ன பன்ன காத்திருக்கானோ தெரியல என்ற வடிவேலு கமெடி டயலாக்கை வைத்தும் சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூமுக்கு வாங்க என்ற டயலாக்கை வைத்து பண்டை கலாய்த்து வருகின்றனர்.
- மிட்செல் மார்ஷ், மார்கிராம் அரைசதம் அடித்தனர்.
- ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 16ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீ்ச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் அரைசதம் விளாசினார். 5.3 ஓவருக்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். ரிஷப் பண்ட்-ஐ 2 ரன்னில் வெளியேற்றினார்.
மார்கிராம் மெல்லமெல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டி 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யாதான் கைப்பற்றினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் 14 பந்தில் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ 19.3 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
4ஆவது பந்தில் டேவிட் மில்லரும், 5ஆவது பந்தில் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் வைடு உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 203 ரன்கள் குவித்தது.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
- சூர்யகுமாருக்கு அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட்டை கொடுத்து பொல்லார்ட் வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
மும்பை அணிக்காக 100-வது போட்டியில் களமிறங்கிய 8-வது வீரர் சூர்யகுமார். அவருக்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்குமுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அம்பதி ராயுடு ஆகியோர் உள்ளனர்.
- நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் இம்பேக்ட் பிளேயராக இடம்பெறவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளாக இம்பெக்ட் பிளேயராக விளையாடி வந்த ரோகித் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்த முடிந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த முடிவை மும்பை அணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
- 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இம்பெக்ட் பிளேயராக கூட அவர் இடம்பெறவில்லை. இது ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.






