என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 75 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ரத் அரை சதம் அடித்தார்.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ஸ்நே ரானா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 வீராங்கனைகள் அரை சதம் கடந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கார்ட்னர் 4 விக்கெட்டும், கிம் கார்த், சதர்லெண்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    75 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது.

    இந்தியா-ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 406 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மந்தனா 74 ரன்னும், ரோட்ரிக்ஸ் 73 ரன்னும், தீப்தி சர்மா 78 ரன்னும் எடுத்தனர்.

    187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. சுதர்லாண்ட் 12 ரன்னுடனும், கார்ட்னெர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று வரை அந்த அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

    இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 15-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
    • ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை கண்டது. அதற்கு அடுத்த சர்வதேச தொடராக ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.

    இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் காலிறுதி ஆட்டத்துக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

    இந்நிலையில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆலோசகர் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ அல்லது பொல்லார்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. வீரராக கலக்கி வந்த இவர் பயிற்சியிலும் தற்போது கலக்கி வருகிறார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

    • மன அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்
    • டிப்ரஷன், பிரஷர் என்பதெல்லாம் அமெரிக்க வார்த்தைகள் என்றார் கபில்

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி இரு-போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமான டிசம்பர் 26-ல் முதல் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதாக இருந்த தொடக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.

    இப்பின்னணியில், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடும் வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சனைகள் குறித்து 1983ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியாவிற்காக கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் 2022ல் "சாட் வித் சாம்பியன்ஸ்" (chat with champions) எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் கபில் தேவ் தெரிவித்ததாவது:

    ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்டவும், மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதாக வீரர்களுக்கு தோன்றினால் ஐபிஎல்-லில் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஐபிஎல் தேசத்திற்கான விளையாட்டு அல்ல. உங்களுக்கு மனதளவில் களைப்பு உருவானால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தவறில்லை. க்ளப் கிரிக்கெட் (ஐபிஎல்) வேறு, நாட்டிற்காக விளையாடுவது வேறு. டிப்ரஷன், பிரஷர் என்பவை அமெரிக்க வார்த்தைகள்; அவை எனக்கு புரிவதில்லை. நான் ஒரு விவசாயி. விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகும் போது பிரஷர் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு கபில் கூறினார்.

    • ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்ப்கள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
    • பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்ப்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    நவீன யுகத்தில் கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பை மறுபரிசலனை செய்யக்கூடிய டிஆர்எஸ் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் ஸ்னிக்கோ மீட்டர் முதல் லேட்டஸ்ட்டாக ஐசிசி அறிமுகப்படுத்திய டைமர் வரை கிரிக்கெட்டில் முடிவுகளை துல்லியமாக வழங்குவதற்காக தற்போது ஏராளமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் தற்போது எலக்ட்ரா ஸ்டெம்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பேஷ் தொடரில் ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்புகள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. ரசிகர்களை கவர்வதற்காகவும் பந்து ஸ்டெம்பு மீது படுவதை நன்றாக அறிவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அது நல்ல வரவேற்பை பெற்றதால் ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2014 முதல் தற்போது அனைத்து வகையான போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 வெவ்வேறு நிகழ்வுகளின் போது 5 வெவ்வேறு வகையான மின் விளக்குகள் எரிந்து சிக்னல் கொடுக்கும்.

    முதலாவதாக இந்த ஸ்டம்பில் பந்து படும் போது சிவப்பு மற்றும் நெருப்பு நிறத்திலான வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். 2-வதாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போது இந்த ஸ்டெம்புகள் பச்சை, ஊதா போன்ற பல்வேறு நிறங்களில் வண்ண வண்ணமாக மாறி மாறி எரிந்து சிக்னல் கொடுக்கும். 3-வதாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் போது இந்த ஸ்டெம்ப்களில் அதே போன்ற வண்ணங்கள் மேலும் கீழுமாக சென்று சிக்னல் கொடுக்கும்.

    அதை விட 4-வதாக பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து நோபால் வீசும் போது இந்த ஸ்டெம்புகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மேலும் கீழுமாக சென்று உடனடியாக சிக்னல் கொடுக்கும். பந்து வீச்சாளர்கள் நோபால் வீசுவதை கண்டறிய இந்த ஸ்டெம்ப்புகள் சென்சார்களை பயன்படுத்தி நோ-பால் வீசுவதை கண்டறிந்து உடனடியாக மின்விளக்குகளால் எரிவதுடன் மைதான ஒலிபெருக்கியில் சிக்னலையும் ஏற்படுத்தும்.

    அதனால் அம்பயர்களை விட துல்லியமாக செயல்படக்கூடிய இந்த ஸ்டெம்புகள் ஓவர்களுக்கு இடையே ஊதா, நீல வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். அப்படி 5 சிறப்புகளைக் கொண்டுள்ள இந்த ஸ்டெம்புகள் மைதானத்தில் தூரத்தில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களை கவர்வதற்காகவும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

    அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் ரோகித் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

    இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.

    துபாயில் 17-வது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது. இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர்களது வரிசையில் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

    பெரிய வீரர்களுக்கு மத்தியில் 20 வயதான உத்திரபிரதேச இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த வீரர் உள்ளூர் தொடரிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை ஏலம் எடுத்தது.

    இந்நிலையில் சமீர் ரிஸ்வி எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் 12 ஆண்டுக்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் நடப்பு ஆண்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு, எனக்கு 7-8 வயது இருக்கும் போது, ரெய்னா ரஞ்சி கோப்பை விளையாடிக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டில் நான் ஒரு பால்பாய். ரெய்னா பேட்டிங் செய்த போது, என்னை அவருக்கு பந்துவீச சொன்னார்.

    மேலும் ஒரு இன்னிங்சுக்குப் பிறகு, அவர் ஸ்லிப் கேட்ச்சிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் என்னை அழைத்து அவருடன் என்னையும் ஸ்லிப்பில் சேர்த்துவிட்டார். அங்கு நான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அவர் தனது சன்கிளாஸை எனக்கு பரிசளித்தார். அதுவே எனது முதல் சந்திப்பு.

    இவ்வாறு ரிஸ்வி கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 98 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இதனை தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா 8, ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில் வில் எங் 24 ரன்களிலும் கேப்டன் டாம் லாதம் 21 ரன்களிலும் சோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்த வந்த வீரர்கள் டாம் பிளண்டல் 4, மால் சேப்மென் 2, ஜோஷ் கிளார்க்சன் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 31.4 ஓவரில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்காளதேசம் தரப்பில் சோரிபுல் இஸ்லாம் 3, டன்சிம் ஹசன் 3, சௌம்மியா சர்கார் 3 விக்கெட்களை எடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து 99 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு அனாமல் ஹைக் 37 (33) கேப்டன் நஜ்முல் சாண்டோ 51* (42) ரன்கள் எடுத்து 15.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக 2007 முதல் நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன் விளையாடிய 18 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது. ஆனால் தற்போது அந்த மோசமான வரலாற்றை வங்காளதேசம் மாற்றியுள்ளது.

     

    நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. 

    • இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார்.
    • 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

    36 வயதான டீன் எல்கர் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை சொந்த மண்ணில் நடைபெறும் 2 ஆட்டங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும். சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் ஆடியதை கவுரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். இது நம்பமுடியாத ஒரு அருமையான பயணமாகும். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கடைசி போட்டியாகும். ஏனெனில் இந்த அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.

    • இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.
    • 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனேயைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு தொடங்கியது. இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் களம் இறங்கிய தமிழக தலைவாஸ் அணியினர் தொடக்கத்தில் நன்றாக ஆடினர். எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20-21 என்ற கணக்கில் சற்று பின்தங்கி இருந்தனர்.

    ஆனால் பிற்பாதியில் பாட்னா வீரர்களின் கை ஓங்கியது. தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல்-அவுட் ஆக்கி பதிலடி கொடுத்ததுடன் மளமளவென புள்ளிகளை திரட்டினர்.

    முடிவில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. அதிகபட்சமாக பாட்னா அணியில் சுதாகர் 11 புள்ளிகள் எடுத்து ரைடில் கலக்கினார். தமிழ் தலைவாஸ் தரப்பில் ஹிமான்ஷு 8 புள்ளிகள் எடுத்தார்.

    5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறது. பாட்னா அணி 3 வெற்றி, 3 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து நடந்த திரில்லிங்கான மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வென்றது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர்.
    • தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 77.4 ஓவர் களில் 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்மிருதி மந்தனா 43 ரன்னுடனும், சினே ரானா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 21-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி மந்தனா அரை சதம் அடித்தார். ஷபாலி வர்மா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரானா 9 ரன்னிலும் மந்தனா 74 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

    ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த கவுர் 0, யாஷிகா 1 என வெளியேற இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து தீப்தி வர்மா - பூஜா ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இறுதியில் 2-ம் நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் எடுத்தது. தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர். 

    ×