search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 376 ரன்கள் குவிப்பு
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 376 ரன்கள் குவிப்பு

    • ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர்.
    • தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 77.4 ஓவர் களில் 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பூஜா வஸ்ட்ராகர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்மிருதி மந்தனா 43 ரன்னுடனும், சினே ரானா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 21-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி மந்தனா அரை சதம் அடித்தார். ஷபாலி வர்மா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரானா 9 ரன்னிலும் மந்தனா 74 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

    ரிச்சா கோஷ் 52 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த கவுர் 0, யாஷிகா 1 என வெளியேற இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து தீப்தி வர்மா - பூஜா ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இறுதியில் 2-ம் நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் எடுத்தது. தீப்தி வர்மா 70 ரன்னிலும் பூஜா 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×