என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
- வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தது. தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றியால் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்தது. இந்திய அணி 64.58 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நியூசிலாந்து அணி 60.00 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு பின் தங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும்.
ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 6-து இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், இங்கிலாந்து 8-வது இடத்திலும், இலங்கை 9-வது இடத்திலும் உள்ளன.
அடுத்த ஆண்டு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
2019-2021 வரை நடந்த முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும், 2021-2023 வரை நடைபெற்ற இரண்டாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும் கைப்பற்றின. இந்திய அணி 2 முறையும் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.
- உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை அவர் முறியடித்தார்.
- 49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தின் ஓட்டப்பந்தய வீராங்கனை ஃபெம்கே போல் நேற்று நடந்த உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை முறியடித்தார். அவர் 49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பு டச்சு சாம்பியன்ஷிப்பில் அவர் செய்த சாதனையை விட 0.07 முன்பே கடந்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் நடந்த உலகப் போட்டிகளில் அவர் வென்ற 400 தடைகள பட்டத்தை தொடர்ந்து இன்டோர் பட்டமும் கிடைத்ததுள்ளது.
டீம்மேட் மற்றும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடுவரான பாட்னர் லீக் கிளேவர் 50.16-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டு டச்சு விளையாட்டு வீரர்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
- இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
- நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.
2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல், டோனியின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.

முடியலடா சாமி என்பது போல என்னை இறக்கி விடு என கிறக்கத்துடன் சாஹல் கூறினார். உடனே சிரித்தப்படி அவரை போகத் கீழே இறக்கி விட்டார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒருவர்.
இந்த வீடியோவை பார்க்கும் போது குத்துச்சண்டையில் ப்ராக் லெஸ்னர் எதிரியை தோள்மேல் தூக்கி வைத்து கீழே போட்டு வெற்றி பெறுவார். அதே மாதிரி இருந்தது. குத்துச்சண்டை போட்டியில் ப்ரால் லெஸ்னர் பிரபலமான வீரராவார்.
2023-24 சீசனுக்கான பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை இழந்த ஏழு கிரிக்கெட் வீரர்களில் சஹாலும் ஒருவர் ஆவார்.
- ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது.
- இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன்.
மும்பை:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியதை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று மைக்கேல் ஆதர்டன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் தொடரில் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி தவித்தபோது விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது. குறிப்பாக 36-ரன்களில் ஆல் அவுட்டான பின் மெல்போர்னில் வென்ற இந்தியா சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது.
ஒருவேளை அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நின்று விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் காட்டிய தைரியம், சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தன.
அதனால்தான் இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன். எனவே இங்கு நான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் பெரிய வீரர்களுக்கு நீங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் வெல்வோம் என்பதை இந்த 2 தொடர்களும் காட்டியுள்ளன. இதற்கான பாராட்டுகள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும்.
இந்த தொடர் நம்மிடம் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும் உறுதியான மனம் கொண்ட வீரர்கள் இருந்தால் வெல்ல முடியும் என்பதை காண்பித்துள்ளது.
என்று கவாஸ்கர் கூறினார்.
- நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலீப்ஸ் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- முதல் இன்னிங்சில் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய கிளென் பிலீப்ஸின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆகி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியின் முதல் இன்னிங்சின் பேட்டிங்கில் 71 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார்.
அதேபோல் நியூசிலாந்து மண்ணில் கடந்த 2008-ம் ஆண்டிற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் கிளென் பிலீப்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளென் பிலீப்ஸ் 2 அரைசதங்களுடன் 276 ரன்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
வெலிங்டன்:
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் (174 ரன்) சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 179 ரன்னில் அடங்கி 'பாலோ-ஆன்' ஆனது.
நியூசிலாந்து அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதுடன், அதிகமாக பவுன்சும் ஆனது. இதனை பயன்படுத்தி நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். தொடர்ந்து ஆடிய நாதன் லயன் 41 ரன்னில் (46 பந்து, 6 பவுண்டரி) மேட் ஹென்றி பந்து வீச்சில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா 28 ரன்னில் (69 பந்து, ஒரு பவுண்டரி) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல்லால் 'ஸ்டம்பிங்' செய்யப்பட்டார்.
இதனையடுத்து டிராவிஸ் ஹெட் (29 ரன்), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்தில் கிளென் பிலிப்ஸ் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (3 ரன்) மற்றும் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய கேமரூன் கிரீன் (34 ரன், 80 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரது விக்கெட்டையும் பிலிப்ஸ் கைப்பற்றி கலக்கினார். கேப்டன் கம்மின்ஸ் (8 ரன்), மிட்செல் ஸ்டார்க் (12 ரன்) நிலைக்கவில்லை.
51.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 6 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பறிகொடுத்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹேசில்வுட் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட டாம் லாதம் 8 ரன்னில் நாதன் லயன் சுழலில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் நாதன் லயன் பந்து வீச்சில் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 15 ரன்னில் டிராவிஸ் ஹெட் சுழற்பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்திடம் பிடிபட்டார்.
நியூசிலாந்து 59 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.
டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய ரச்சின் ரவீந்திரா அடுத்த ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி 77 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்டில் ஆடும் ரச்சின் ரவீந்திரா அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரச்சின் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய மிட்செல் 38 ரன்னில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 196 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேமரூன் க்ரின் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் யூகோ ஹம்பர்ட் கோப்பை வென்றார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஹம்பர்ட் 6-4, 6-3 என நேர் செட்களில் பப்ளிக்கை எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தினார்.
- காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
- பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதியது. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நாட் சிவெர் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
'டாஸ்' ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 9 ரன்னிலும், அடுத்து வந்த சப்னினி மேக்னா 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 9 ரன்னிலும், ரிச்சா கோஷ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 42 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
4-வது வீராங்கனையாக களம் கண்ட எலிசி பெர்ரி நிலைத்து நின்று ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த சோபி மொலினிஸ் 12 ரன்னிலும், ஜார்ஜியா வார்ஹம் 27 ரன்னிலும் வெளியேறினர். 20 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. எலிசி பெர்ரி 44 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), ஸ்ரேயங்கா பட்டீல் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நாட் சிவெர், பூஜா வஸ்ட்ராகர் தலா 2 விக்கெட்டும், இஸ்சி வோங், சாய்கா இசாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 45 ரன்னை எட்டிய போது (3.5 ஓவரில்) யாஸ்திகா பாட்டியா 31 ரன்னில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) சோபி டெவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்சிடம் சிக்கினார். அடுத்து ஹீலி மேத்யூஸ் 26 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 27 ரன்னிலும் (25 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
15.1 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலி கெர் 40 ரன்களுடனும் (24 பந்து, 7 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 3-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது. மும்பை வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
- முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சில்ஹெட்டில் நாளை நடக்கிறது.
- முதல் 2 ஆட்டங்களுக்கு அசலங்கா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சில்ஹெட்டில் நாளை நடக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் பெரேரா சுவாச பிரச்சினை காரணமாக 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.
நடுவருடன் வாக்குவாதம் செய்ததால் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா முதல் இரு ஆட்டங்களில் விளையாட முடியாத நிலையில் குசல் பெரேராவும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களுக்கு அசலங்கா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது.
- முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
The first step of the journey! ?
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2024
Huddle ?! ??#WhistlePodu pic.twitter.com/0nkmaM3P30
- கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
- நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
"எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.
இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். என்.ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 48 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதானமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






