என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும்.
    • ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போட்டி போட்டு வருகின்றன.

    3 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி 2 வெற்றி 1 டிரா உடன் 5 புள்ளிகளுடனும் 2-ம் இடத்திலும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி 1 டிரா மற்றும் 1 தோல்வி என 3 புள்ளிகளுடனும் 3-ம் இடத்திலும் உள்ளது

    இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்விடைய வேண்டும். இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.

    ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

    இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட், "இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடவே ஆஸ்திரேலியா அணி விரும்பும், மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள்" என்று பேசியிருந்தார்.

    ஹசல்வுட்டின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட், ஒரு நாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    "ஹசல்வுட் இதை பற்றி நகைச்சுவையாகவே பேசியிருந்தார். ஆனால் அவர் கூறியதை திரித்து அதை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக முழு முயற்சியுடன் விளையாடுவோம். அவர்கள் ஒரு வலிமையான எதிரியாக எங்களுக்கு இருப்பார்கள். ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது" என்று கம்மின்ஸ் தெரிவித்தார். 

    • மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
    • போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 13-21 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீரரான கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.

    பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யு போ பாயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி இணை 12-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜியான் ஜென் பாங்-வெய் யாஜின் ஜோடியிடம் பணிந்தது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    • தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்கள் அடித்தார்.
    • ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை நேபாளம் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.

    நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டல் 4 விக்கெட்டுகளும் தேபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    116 என்ற இலக்கை துரத்திய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்சன் ஜாவை டீ காக் ரன் அவுட் செய்தார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.

    நேபாளம் அணியை நிலை குலைய வைத்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

    • குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 5 புள்ளிகளை பெற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம், தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா.

    இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.

    அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

    • அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதனால், 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.

    பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    • போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.

    இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.

    • இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது.
    • இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.

    புளோரிடா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 மணி நேரம் கழித்து ஆய்வு செய்த பின்னர் 5 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது. இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.


    அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி நடைபெறமால் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெறும். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

    இதனால் போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வேண்டி கொண்டிருப்பார்கள்.

    • யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல.
    • நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோயோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோயோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஃபிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஃபிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்.

    எனவே நீங்கள் யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் ஃபிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ-யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவேன் என கவுதம் கம்பீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.
    • எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது.

    2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது குரூப் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருகிறது. அடுத்து சூப்பர் 8 சுற்று முழுவதும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற இருப்பதால் இந்திய அணி அங்கு செல்ல உள்ளது. அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது.

    இந்த நிலையில் அணியில் இருக்கும் நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ கூறியுள்ளது. மற்ற இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது இந்திய அணியுடன் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும். எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது. இந்திய அணியும் நான்கு மாற்று வீரர்களை அறிவித்தது.

    அதில் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தேவை இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். மாற்று துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே, நான்காவது வீரராக இருக்கும் சுப்மன் கில்லை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    மேலும், வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள பிட்ச்கள் அனைத்தும் மந்தமானவை என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அங்கு அதிக வேலை இல்லை. ஏற்கனவே, 15 பேர் கொண்ட அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் ஹர்திக் பாண்டியாவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். மாற்று வீரர்களில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். எனவே, ஆவேஷ் கானை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 1-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.
    • இந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஸ்பெயின் வீரர் நடால் விலகி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.

    இதற்கிடையே, விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், விம்பிள்டன் போட்டியில் இந்த முறை விளையாடப் போவதில்லை என முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபெல் நடால் அறிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை.
    • ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முக்கிய காரணமாக அமைந்தார்.

    கிட்டத்தட்ட 10 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய அணிக்கு திரும்பினார். அதுவரை பும்ராவால் மீண்டும் பழைய மாதிரி பவுலிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பும்ரா தனது பவுலிங் மூலமாக ஒட்டுமொத்த உலகிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் கிளென் மெக்ராத், லசித் மலிங்காவின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை. ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மிரட்டுகிறார்.

    பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்று. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.

    மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம். நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    ×