என் மலர்
விளையாட்டு
- உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை.
- ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது.
மும்பை:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முக்கிய காரணமாக அமைந்தார்.
கிட்டத்தட்ட 10 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய அணிக்கு திரும்பினார். அதுவரை பும்ராவால் மீண்டும் பழைய மாதிரி பவுலிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பும்ரா தனது பவுலிங் மூலமாக ஒட்டுமொத்த உலகிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கிளென் மெக்ராத், லசித் மலிங்காவின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை. ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மிரட்டுகிறார்.
பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்று. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.
மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம். நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது.
என்று ரவி சாஸ்திரி கூறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, சீன தைபே வீரரான சி.ஒய். லின் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் 12-21, 13-21 என்ற கணக்கில் சமீர் தோல்வியடைந்தார்.
- 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
- பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் மற்றும் ஐபேட், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா தப்பியோடினார். போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
போலீசார் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியை பிடித்தால் தான் இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவரும்.
- பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினால் இப்படிதான் நடக்கும் என பாகிஸ்தான் பத்திரைக்கையாளர் கூறியிருந்தார்.
- இந்த பதிவுக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டிரினிடாட்:
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இதன் மூலம் குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில் நியூசிலாந்து அணி வெளியேறியதையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ஏப்ரலில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உலகக் கோப்பை 2024-க்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்த தொடரில் விளையாடாமல் நியூசிலாந்து சீனியர் வீரர்கள் ஐபிஎல் விளையாட சென்றனர். தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்காக விளையாடினால் இப்படிதான் நடக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்னாள் நியூசிலாந்து வீரரான மிட்செல் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், எங்களது சி பக்கமான அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததை என பதிலடி கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
- அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் யார் என்று ஷகிப் கேள்வி எழுப்பினார்.
கிங்ஸ்டவுன்:
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.
பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.
என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.
- சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.
- ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.
அந்த வகையில், இன்று காலை நடைபெற்ற தொடரின் 29-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் க்ரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது.

க்ரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக க்ரூப் சி-யில் நியூசிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.
- பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
- கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.
லாடர்ஹில்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது.
இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.
லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு எதிராக நாளைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.
- அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
- பசல்ஹாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி துவக்கம் முதலே ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் டோனி உரா, கேப்டன் அசாத் வாலா முறையே 11 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லெகா சைகா மற்றும் சீஸ் பௌ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இடையில் நிதானமாக ஆடிய கிப்லின் டோரிகா 27 ரன்களையும், அலெய் நௌ 13 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் 95 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

96 எனும் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11 ரன்களிலும், இப்ராகிம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 49 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஓமர்சாய் மற்றும் முகமது நபி முறையே 13 மற்றும் 16 ரன்களை எடுத்தனர்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அலெய் நௌ, செமோ கெமியா மற்றும் நார்மன் வனுவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
- பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ஷேசாத் மற்றும் பாபர் என இருவரின் டி20 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள் கொண்டு ஒப்பீடு செய்யப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "புள்ளி விவரங்களை பார்க்கும் போது, நானே சிறப்பாக செயல்பட்டு இருப்பேன் என்று தோன்றுகிறது. உனது புள்ளி விவரங்கள் என்னைவிட மோசமாகவே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர்களில் 205 பந்துகளை எதிர்கொண்டு, நீ ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை."
"உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை நீ அழித்துவிட்டாய். குழுவில் உள்ள உனது நண்பர்களுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. 22 வயது வீரரான சயிம் ஆயுப் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டியது உனது கடமை, ஆனால் இளம் வயதிலேயே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. வெறும் 25 போட்டிகளில் ஆயுப்-ஐ மக்கள் விமர்சிக்கின்றனர்," என தெரிவித்தார்.
- அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து கட்டாயம் வென்றாக வேண்டும்.
- லாடெர்ஹில்லில் தற்போது மழை பெய்து வருகிறது.
லாடெர்ஹில்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.
தனது முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (கனடா, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ள அமெரிக்காவுக்கு இது கடைசி லீக்காகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி சூப்பர்8 சுற்றுக்குள் கால்பதிக்கும். தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். இந்தியாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருந்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் (இந்தியா மற்றும் கனடாவுக்கு எதிராக) தோல்வியை தழுவியது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து கட்டாயம் வென்றாக வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு உருவாகும். மாறாக அயர்லாந்து தோற்றால் அதனுடன் சேர்ந்து பாகிஸ்தானும் மூட்டையை கட்ட வேண்டியது தான்.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் அமெரிக்காவும், அயர்லாந்தும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.
லாடெர்ஹில்லில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை பெய்வதற்கு 85 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் அமெரிக்கா 5 புள்ளியுடன் அடுத்த சுற்றை எட்டி விடும். அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளின் கதை முடிவுக்கு வந்து விடும். போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் நேரப்படி இரவில் தென்ஆப்பிரிக்கா-நேபாளம், நியூசிலாந்து- உகாண்டா அணிகளின் ஆட்டங்கள் தொடங்கினாலும் இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி முறையே மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி, காலை 6 மணிக்கு தான் தெரியும்.
- இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் சித்தரிப்புடன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
- ஆங்கிலேயர்களுடன் நம் நாட்டுக்காரர்கள் கிரிக்கெட் விளையாடி வென்று வரி விலக்கு பெறுவது தொடர்பான திரைக்கதையை கொண்டிருக்கும்.
'லகான்' பட போஸ்டரை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி அமைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் இடம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பை எட்டி உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
இந்தநிலையில் அமீர்கான் நடிப்பில் வெளியான பிரபல திரைப்படமான 'லகான்' படத்தின் போஸ்டர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்டு ரோகித் சர்மா, கோலி, பாண்டியா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகங்கள் சித்தரிப்புடன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை வலைத்தளவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.

2001-ம் ஆண்டு வெளியான 'லகான்', ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடப்பதுபோலவும் ஆங்கிலேயர்களுடன் நம் நாட்டுக்காரர்கள் கிரிக்கெட் விளையாடி வென்று வரி விலக்கு பெறுவது தொடர்பான திரைக்கதையை கொண்டிருக்கும்.
- 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி சார்பில் சோயப் கான் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (11) அடித்தார். இதன் மூலம் 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 12 மற்றும் 24 ரன்களை அடித்தனர்.
பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில், இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஓமன் சார்பில் பிலால் கான் மற்றும் கலீமுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.






