என் மலர்
நீங்கள் தேடியது "Cricket gambling"
- 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
- பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் மற்றும் ஐபேட், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா தப்பியோடினார். போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
போலீசார் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியை பிடித்தால் தான் இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவரும்.
- கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- தாவூத் இப்ராஹிமின் ‘டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை செய்தன. முன்னதாக இந்த போட்டியை வைத்து ரூ.5 ஆயிரம் கோடிக்கு மாபெரும் சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமானதாக இந்திய அணி உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து இருந்தனர். துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானதாகவும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை துபாய் வரை நீண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu






