என் மலர்
நீங்கள் தேடியது "ICC Cricket"
- கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- தாவூத் இப்ராஹிமின் ‘டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை செய்தன. முன்னதாக இந்த போட்டியை வைத்து ரூ.5 ஆயிரம் கோடிக்கு மாபெரும் சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமானதாக இந்திய அணி உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து இருந்தனர். துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானதாகவும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை துபாய் வரை நீண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.
அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.






