என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது.
    • கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.

    இதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

    தெண்டுல்கர், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது. அடிப்படை விதிமுறைப்படிதான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கில் நடுவரான ஆஸ்திரேலியாவின் டாக்டர் அன்னாபெல் பென்னட் முன்பு வினேஷ் போகத் வக்கீல்கள் ஹரீஷ் சால்வே, விதுஷ்பத்சிங்கானியா ஆகியோர் அளித்த வாதங்கள் விவரம் வெளியாகி உள்ளது. அவர்கள் கூறியதாவது:-

    ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ். அவர் ஒரேநாளில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் உலகின் நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை வென்றார். போட்டிக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்ட எடைக்குள்தான் இருந்தார். செவ்வாய்க் கிழமை இரவுக்குள் அவரது எடை கிட்டத்தட்ட 3 கிலோ அதிகரித்தது.

    போட்டி நடைபெறும் இடத்திற்கும், வீராங்கனைகள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமாக இருந்தது. இதனால் அவரது எடைக் குறைப்பிற்கான நேரம் கிடைக்கவில்லை. மேலும் ஒரேநாளில் 3 போட்டி காரணமாக சரியான எடையை வைத்திருக்க முடியவில்லை.

    அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள அவர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஒருவர் தொடர் போட்டிகளில் விளையாடுவதால் அவரது தசையின் எடை அதிகரிக்கும்.

    வினேஷ் இறுதிப் போட்டிக்கு முன், இரவு முழுவதும் விழித்திருந்தார். உடல் எடையைக் குறைக்க ஓடுதல், ஸ்கிப்பிங் செய்தார். மேலும், முடியை வெட்டி ரத்தத்தை வெளியேற்றும் அளவிற்கு முயற்சி செய்தார். இருப்பினும் அவரது எடை 100 கிராம் அதிகரித்து இருந்தது.

    100 கிராம் கூடுதல் எடை அவருக்கு எந்தவிதமான திறமையும் அளித்திருக்காது. இந்த அளவு மிகக் குறைவானது. இது தடகளத்தில் 0.1 முதல் 0.2 சதவிகிதம்தான்.

    மேலும் கோடை காலத்தில் வெப்ப நிலை காரணமாக தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கலாம். ஒரேநாளில் 3 போட்டிகளில் இருந்ததால் அவரது உடல் ஆரோக்கியத்திற்காக அவர் கூடுதல் தண்ணீர் எடுத்திருக்கலாம்.

    எனவே எந்த ஒரு மோசடியிலும், பதக்கத்தைப் பெறுவதற்கு தவறான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. கடின உழைப்பால் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனவே அவருக்கான வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வாதங்களை முன் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.
    • 22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த வருடம் நடைபெற்றுவந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. சுவாரஸ்யமான தருணங்கள் பல நிறைந்ததாக இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமைந்தன.

    அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார்.

     

    அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.

    இந்த வருட ஒலிம்பிக்சில், 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4x400 மீட்டர் Medley Relay-வில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

     

    22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.
    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை

    இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.

    இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

    தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார்.
    • திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

    தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார். பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்

    இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதான ஊழியர்களுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • கான்வே காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.
    • மைக்கேல் பிரேஸ்வெலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இந்தியாவில் நடைபெறும். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் இடம பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலினுக்கு பதிலாக அஜாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுமார் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல்ரவுண்டர் மிக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டிம் சவுதி அணியின் கேப்டனாக தொடர்கிறார். டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் இடம பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நொய்டாவில் நடக்கிறது.

    இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது டெஸ்ட் செப்டம்பர் 26-ந்தேதியும் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஆசிய கோப்பை தொடரில் சமாரி அட்டப்பட்டு 304 ரன்கள் குவித்தார்.

    கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் ஐசிசி தேர்வு செய்து அவர்களை அந்தந்த மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கும்.

    அதன்படி ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, இங்கிலாந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    இலங்கையில் நடைபெற்ற பெண்களுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சமாரி அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் சமாரி அட்டப்பட்டு ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அட்கின்சன் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    சமாரி அட்டப்பட்டு பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் 304 ரன்கள் குவித்தார். சராசரி 101.33 ஆகும். மலேசியாவுக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முக்கியமான போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் விளாசினார்.

    • இந்தியா- வங்கதேசம் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது.
    • இதற்கு பயிற்சியாக இருக்கும் என்பதால் சின்னசாமி மைதானத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ கேட்டுள்ளது.

    இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முக்கியமானதில் ஒன்று துலீப் டிராபி. இந்தத் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது.

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விளையாட விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது.

    ஹர்திக் பாண்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளார். இதனால் அவர் விளையாட வாய்ப்பில்லை. இஷான் கிஷன் நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் உள்ளார். இவரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    • ஈட்டி எறிதலில் 92.97 மீட்டர் தூரம் வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நதீமுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கிய மாமனார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.

    இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

    ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

    மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்.

    அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

    'மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்' என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார்.

    நவாஸின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    • வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை தீர்ப்பு.
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் அப்பீல் செய்தார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் இதற்கு பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில், வீரர்களின் எடை விவ காரத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி வரு கிறார்கள்.

    இந்த நிலைிய்ல வினேஷ் போகத் எடை பிரச்சினைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா ஆவேசமாக கூறி உள்ளார். இது தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    ஒவ்வொரு விளை யாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள்.

     ஆனால் இந்திய ஒலிம் பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும் போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்சனைகளை கவனித்துக் கொள்வார்கள்.

    மேலும் ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோ தெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்த பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும்.

    எனவே வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்தி வாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல.

    இவ்வாறு பி.டி. உஷா கூறியுள்ளார்.

    • ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது அமெரிக்கா.
    • ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது.

    அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது.


     

    33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.

    உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.

    நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.  



    அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மேடையில் தோன்றினார். அவர் மேற்கூரையில் இருந்து அந்தரத்தில் சாகசத்துடன் ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்று அவர் மோட்டார்சைக்கிளில் சென்றார். 

    'மிஷன் இம்பாசிபிள்' படம் போல் அவர் தன்னுடைய செயலை வெளிப்படுத்தினார். சில நிமிடங்கள் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

     


    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய நிறைவு விழா 3.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. 34-வது ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

    117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.

    இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை. 

    • வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையே 1வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்களை சேர்த்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களையே எடுத்தது.

    124 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐந்தாம் நாளில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

    அடுத்து களமிறங்கிய கீசி கார்டி 31 ரன்களையும், அலிக் அத்தானாஸ் 92 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 15 ஆம் தேதி கயானாவில் தொடங்க இருக்கிறது.

    • தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ் பகிர்ந்துள்ளார்
    • உங்களை நீங்கள் நம்பினால், விரும்பியதை அடைய முடியும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.

    தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

    அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×