என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர் இடம்பெற்றுள்ளன.
    • 'சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு'

    இமானே கெலிஃப் புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும் இடம்பெற்றுள்ளனர்

    ரத்தத்தில் முடிந்த குத்துச்சண்டை 

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

    66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.

     

    இதற்கிடையே இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்குப் பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

    இமானேவின் சட்டப் போராட்டம் 

    அதைத்தொடர்ந்து , பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்தார். மேலும் இமானே கெலிஃப் பாலின கேலி புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும்!.. சொன்னது என்ன?

    வழக்கு தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இமானே அளித்துள்ள புகாரில் தொழிலதிபர் மற்றும் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கின் பெயரும் ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

     

    மஸ்க் -ரௌலிங் சொன்னது என்ன?

    போட்டிகளின் போது இமானேவின் பாலினம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில், ஆண்களுக்கு பெண்களின் விளையாட்டில் இடமில்லை என்று இமானேவை விமர்சித்த பதிவை ரீபோஸ்ட் செய்து கண்டிப்பாக என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.

    மேலும் ஜே .கே ரவுலிங் தனது எக்ஸ் பதிவில், 'இமானே குத்துச்சண்டை களத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதை பார்த்துவிட்டு, உங்களின் பொழுதுபோக்குக்காக ஒரு பெண்ணை ஆண் அடிப்பதை பற்றி விளக்கம் கொடுங்கள். சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு, இது பெண்களுக்கு எதிராக ஆண்கள் தங்களின் சக்தியைக் காட்டிக்கொள்ளும் செயல்' என்று தெரிவித்துருந்தார். 

    எலான் மஸ்க் மற்றும் ஜெ.கே.ரௌலிங் ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட lgbtq  சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது  குறிப்பிடத்ததக்கது .  

    • இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
    • அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் ஆட்டத்தில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே.

    இதில் லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை வந்து தோற்றார். சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் வெளியேறியது. இதே போல பி.வி.சிந்துவும் கால் இறுதியில் தோற்றார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 3 ஆட்டத்திலும் தோற்று தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது. பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்பப்பா-தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    இதை அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உண்மையை சரியாக பெறாமல் எப்படி அந்த தகவலை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு கூறலாம். தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

    நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது ஒலிம்பிக் பதக்க இலக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகுதான் நான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது".

    இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.

    • உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ மாற்றியது.
    • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.

    இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. மாற்றப்பட்ட அட்டவணைப்படி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் நடைபெற இருக்கிறது.

    முன்னதாக இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்தது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.

    மாற்றப்பட்ட அட்டவணை:

    அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இதில் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்க இருந்த முதலாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    இதேபோன்று முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதியும், மற்ற இரண்டு டி20 போட்டிகள் முறையே அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

    வங்காளதேசத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.

    இதில் டி20 தொடர் ஜனவரி 22, ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் போட்டியும், பிப்ரவரி 9 மற்றும் பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் மற்ற இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.

    இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானின் நவாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் நவாமி ஒசாகா, அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஆஷ்லின் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜப்பானின் நவாமி ஒசாகா சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
    • இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    மும்பை:

    இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

    இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.

    இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் சுமித் நாகல் தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மெக்கின்ஸ் மெக்டொனால்டை எதிர்கொண்டார்..

    இந்தப் போட்டியில் மெக்டொனால்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கிறது.
    • பாகிஸ்தானில் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    எல்லைப் பிரச்சனையால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தும்படி ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

    சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளார். வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பசித் அலி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:

    வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்.

    அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.

    நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.
    • இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் ஒருபோதும் முனையப் போவதில்லை. எங்காவது டிரா இருக்கும். மோசமான வானிலை இருக்கும். எனவே, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என தெரிவித்தார்.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்

    பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.

    இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

    2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
    • வினேஷ் போகத்திற்கு சச்சின், கங்குலி, உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.

    இதைத் தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

    சச்சின், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

    • தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார்.
    • ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது

    ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய பாட்மிட்டான் வீரர் பிரமோத் பகத்துக்கு சர்வதேச பாட்மிட்டன் சம்மேளனம் 18 மாத தடை விதித்துள்ளது. இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரமோத் பங்கேற்க முடியாது. எனவே விரைவில் தொடங்க உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் இழந்துள்ளார்.

     

    12 மாதங்களில் தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார். இதனால் அவர் ஊக்கமருந்து தடை விதிகளை மீறியதை உறுதி செய்து விளையட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் [Court of Arbitration of Sport (CAS) Anti-Doping Division] உறுதி செய்தனர்.

    ஆனால் இதை எதிர்த்து அன்றைய தினம் பிரமோத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த 18 மாத தடையானது சர்வதேச பாட்மிட்டன் சமேலானதால் விடிக்கப்பட்டுள்ளது.

    எனவே வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ×