search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Asia Cup"

    மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, இலங்கை அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenAsiaCup #WAC2018 #INDvSL

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 4-வது லீக் போட்டியில் இலங்கை அணியை இன்று எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யசோதா மெண்டிஸ், நிபுனி ஹன்சிகா ஆகியோர் களமிறங்கினர். நிபுனி 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் யசோதா உடன், ஹாசினி பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். யசோதா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹாசினி 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி பந்துவீச்சில் எக்தா பிஷிட் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். மிதாலி ராஜ் 23 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதைத்தொடர்ந்து அனுஜா பட்டேல் களமிறங்கினார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. #WAC2018 #INDvSL
    மகளிர் ஆசிய கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் வங்காளதேச அணி இந்திய அணியின் தொடர் ஆசிய கோப்பை வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. #WAC2018 #TeamIndia #BCCI #BleedBlue

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் கலந்துகொண்டன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. 

    அதன்பின் 2005-06 தொடரில் பாகிஸ்தானும் கலந்துகொண்டது. இந்த முறையும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. 

    2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசம் அணியும் கலந்துகொண்டது. இந்த முறையும் வழக்கம்போல இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது. 2012-ம் ஆண்டு முதல் இந்த தொடர் டி20 முறைக்கு மாற்றப்பட்டது. இந்த தொடரில் சீனா, தாய்லாந்து, ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும் கலந்துகொண்டன. இந்த முறையும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சீனா, ஹாங்காங் பங்கேற்கவில்லை. இந்த தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் ஆறு தொடர்களில் விளையாடிய 32 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்தது.



    இந்நிலையில், 7-வது மகளிர் ஆகிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்தது.

    இதன்மூலம், இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு வங்காளதேச அணி முற்றுப்புள்ளி வைத்தது. இதுவரை விளையாடிய 34 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடையாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #WAC2018 #TeamIndia #BCCI #BleedBlue
    மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி, இந்திய அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenAsiaCup #WAC2018 #BANWvINDW

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, வங்காளதேச அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மிதாலி ராஜ் 15 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் பூஜா வஸ்த்ரகர் - ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். பூஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து தீப்தி சர்மா களமிறங்கினார். சிறப்பாக விளையாடிவந்த ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்னிலும், தீப்தி சர்மா 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் ருமானா அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். 



    இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தனா, ஆயஷா ரஹ்மான் ஆகியோர் களமிறங்கினர். ஆயஷா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா ஹக் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஷமிமா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

    அதன்பின் வந்த நிகார் சுல்தானா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா உடன் ருமானா அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. ஒரு கட்டத்தில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஜூலன் கோஸ்வாமி 18-வது ஓவரை வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் வங்காளதேச அணிக்கு 12 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

    சிறப்பாக விளையாடி வந்த பர்கானா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வங்காளதேச அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்கானா 52 ரன்களுடனும், ருமானா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி நாளை தனது 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. #WAC2018 #BANWvINDW

    ×