என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது.
    • கலை நிகழ்ச்சியில் திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்

    17-வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.

    அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா படானி மற்றும் பாடகி ஷ்ரேயா கோஷால் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

    • என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
    • நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.

    பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.

    கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.

    கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை. கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.

    சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி.

    என்று கில் கூறினார்.

    • சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
    • டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சென்னை:

    ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    23-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 :15 மணிக்கு தொடங்கியது.

    டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் இணையதளம் மூலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதளம் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொபைல் லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.

    டிக்கெட் விலை 1700 ரூபாய் ,2500 ரூபாய்,ரூ. 3500,ரூ. 4000 ரூபாய்,ரூ.7500 என்ற அளவு டிக்கெட் விற்பனை இருந்தது. இதில் ஏதேனும் ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.

    வழக்கம் போல் உங்களுக்கு முன்பு பெரிய வரிசை காத்திருப்பதாக அந்த புக்கிங் தளத்தில் காட்டப்பட்டிருந்தது. இதில் சுமார் லட்சம் ரசிகர்கள் வரை தங்களது டிக்கெட் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் டிக்கெட் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நேர்ந்தாலும், இதேபோல் ஒரு சூழல்தான் உருவாவதாகவும் 40 ஆயிரம் பேர் பார்க்கும் மைதானத்தில் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் சாடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் டிக்கெட்டுகள் குறைந்த அளவே விற்கப்படுவதாகவும் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

    இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.

    • ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஓமர்சாய் என பலமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் உள்பட 9 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஷ்ரேயாஸ் அய்யரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கி, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    ஷ்ரேயாஸ் அய்யர், நேஹால் வதேரா, விஷ்னு வினோத், ஜோஷ் இங்கிலிஸ், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங்

    ஆல்-ரவுண்டர்கள்

    மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், பிரியன்ஷ் ஆர்யா, ஆரோன் ஹர்டி, முஷீர் கான், சூர்யான்ஸ் ஷெட்ஜ்

    பந்து வீச்சாளர்கள்

    அர்ஷ்தீப் சிங், சாஹல், வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், பிரவின் துபே

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. அல்லது புதுமுகங்களை பரிசோதனை முயற்சியில் களம் இறக்கி பார்க்கலாம்.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. முஷீர் கான் முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர். தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சு

    சுழற்பந்து வீச்சில் சாஹல், ஹர்ப்ரீத் பிரார் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்கு துணையாக பிரவீன் துபே, மேக்ஸ்வெல் உள்ளனர்.

    வேகப்பந்து வீச்சு

    வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகிப்பார். இவருடன் வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், ஸ்டோய்னிஸ், யான்சன், ஆரோன் ஹர்டி என மிகப்பெரிய பட்டாளமே உள்ளது.

    வெளிநாட்டு வீரர்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் ஆகியோர் உள்ளனர். இதில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் மற்றும யான்சனை இம்பேக்ட் பிளேயர் முறையில் களம் இறக்க வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் கிங்ஸை ஷ்ரேயாஸ் அய்யர் எப்படி என சமநிலை அணியாக கொண்டு வருகிறார் என்பதுதான் முக்கியமானது.

    • ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.

    பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.

    நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    • கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுழற்பந்து வீச்சில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.

    ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    ஆல்-ரவுண்டர்கள்

    அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.

    பந்து வீச்சாளர்கள்

    மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சு

    மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.

    ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.

    வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இஷாராணி பரூவா முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.

    இதில் இஷாராணி 18-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
    • யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.

    தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

    ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

    இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான்.
    • அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்.

    2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    எனக் கூறினார். 

    • சான்ட்னெர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என 4 சர்வதேச கேப்டன்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • பும்ரா தொடக்க போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும்.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    அணி வீரர்கள் விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஸ்ரீஜித் கிருஷ்ணன், பெவன்-ஜான் ஜேக்கப்ஸ், திலக் வர்மா.

    ஆல்-ரவுண்டர்கள்

    ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், வில் ஜேக்ஸ், மிட்சல் சான்ட்னெர், ராஜ் அங்காட் பவா, விக்னேஷ் புதுர், கார்பின் போஸ்ச்.

    பந்து வீச்சாளர்கள்

    டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அர்ஜுன் தெண்டுல்கர், பும்ரா, வெங்கட சத்யநாராயன பென்மெட்சா, கரண் சர்மா, அஷ்வினி குமார், முஜீப் உர் ரஹ்மான்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ரோகித் சர்மா, ரியன் ரிக்கெல்டன் ஆகிய இரண்டு முக்கிய தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. ரோகித் சர்மா உடன் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரியான் ரிக்கெல்டன் களம் இறங்குவது சாதகமாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதும்.

    சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ரிக்கெல்டன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். வலது இடது காம்பினேசனை கருத்தில் கொண்டு இருவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிக்காததால், கடந்த காலங்களில் ரோகித் சர்மா பின்வரிசையில் களம் இறங்கியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் திலக் வர்மா தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையெனில் புதிய வீரர்களில் ஒருவரை முயற்சி செய்து பார்க்கலாம்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

    திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வில் ஜேக்ஸ் போன்றோர் உள்ளனர். திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக கடந்த சில போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது இல்லை. இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அஷ்வினி குமார், வெங்கட சத்யநாராயண பென்மெட்சா, அர்ஜூன் தெண்டுல்கர், கார்பின் போஸ்ச் (ஆல்ரவுண்டர்) என நீண்ட வேகப்பந்து வீச்சாளர் பட்டியலை கொண்டுள்ளது. பும்ரா தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த அணிக்கு சற்று சவாலானதாக இருக்கும்.

    புதுப்பந்தில் டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். புதுப் பந்தை சிறந்த முறையில் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்கள் என்பதால் பவர் பிளேயில் ரன் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளார்.

    ஒருவேளை தீபக் சாஹர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஷ்வினி குமார், அல்லது வெங்கட சத்ய நாராயண பென்அட்சாவை பயன்படுத்தலாம்.

     

    சுழற்பந்து வீச்சாளர்கள்

    கரண் சர்மா, மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேர் உள்ளனர். மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுடன் இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுப்பார்கள்.

    வெளிநாட்டு வீரர்கள்

    ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), பெவன்-ஜான் ஜேக்கப்ஸ் (பேட்ஸ்மேன்), வில் ஜேக்ஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் சான்ட்னெர், கார்பின் போஸ்ச், டிரென்ட் போல்ட், ரீசே டாப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

    இவர்களில் 4 பேரை மட்டுமே ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியும். 3 பேரை சேர்த்தால் இம்பேக்ட் வீரராக மற்றொருவர் களம் இறங்கலாம். இவர்களை ஹர்திக் பாண்ட்யா எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    ரிக்கெல்டன், முஜீப் உர் ரஹ்மான், டிரென்ட் போல்ட், சான்ட்னெர் ஆகியோரை தேர்வு செய்தால் வில் ஜேக்ஸ் விளையாட முடியாது. முஜீப் உர் ஹர்மான், சான்ட்செர் ஆகியோரில் ஒருவர் மட்டும் ஆடும் லெவனில் இறக்கப்பட்டால், இம்பேக்ட் வீரரான வில் ஜேக்ஸ்-ஐ பயன்படுத்த முடியும். இவர் பகுதி நேரமாக சுழற்பந்தும் வீசக் கூடியவர்.

    ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர்தான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும். எப்படி இருந்தாலும் ஏராளமான சர்வதேச கேப்டன் என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு அணியாக வளம் வரும் என்பதில் சந்தேகமில்லை.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ×