என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுக்கு டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்சிபி அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.

    இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.

    மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த அரைசதம் அடித்த வீரர்கள் அணி மொத்தம்

    டிம் டேவிட் ராயல் (சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs பஞ்சாப் கிங்ஸ் 26 பந்துகளில் 50* - 95/9 பெங்களூரு 2025

    விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 29 பந்துகளில் 56 * - 106/2 பெங்களூரு 2013

    ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 44 பந்துகளில் 50* - 108/9 சென்னை 2019

    ரியான் மெக்லாரன் (மும்பை இந்தியன்ஸ்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 43 பந்துகளில் 51* - 112/8 நவி மும்பை 2011

    சாம் கரன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) vs மும்பை இந்தியன்ஸ் 47 பந்துகளில் 52 -114/9 ஷார்ஜா 2020

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ளது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் திருப்திகரமாக அமையவில்லை. ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்சின் (ஆஸ்திரேலியா) மனைவி ரெபேக்கா விமான நிலையத்தில் மூட்டை முடிச்சுகளுடன் கம்மின்சும் இருக்கும் இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'இந்தியாவில் இருந்து விடைபெறுகிறேன். இந்த அழகான நாட்டுக்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் கம்மின்ஸ் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து ஐதராபாத் நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் விளாசிய சச்சின், ருதுராஜ் சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.
    • இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.

    ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது.

    இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 95 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் அடித்திருந்த போது ஒரு மகத்தான சாதனையை முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் ஆகியோரை ரஜத் பட்டிதார் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரும், ருதுராஜூம் 31 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது ரஜத் 30 இன்னிங்ஸ்லே ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.

    இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குஜராத் அணியின் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமான ஐபிஎல் இல் ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த ரெக்கார்டை அவர் 2011 ஆம் ஆண்டு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒரு தனித்துவமான சாதனையை படிதார் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 35-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.

    • வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.
    • இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐபிஎல் சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. நான் இங்கு விளையாடிய முதல் போட்டி இன்னும் என் நினைவில் இருக்கின்றது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை.

    என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றது.

    வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். இங்கு நாம் அதிக போட்டிகளில் விளையாடிருகின்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.

    நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    முதன் முதலில் கிரிக்கெட் விளையாடும்போது நாம் எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் விளையாட போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் நான் இந்த மைதானத்தில் ஒரு சாதாரண வீரராக வந்து தற்போது எனது பெயரிலே ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்பதில் நினைக்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கின்றது.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இந்திய அணியில் வீரராக நான்கு ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.

    இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.

    ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியல்:-

    ஆர்.சி.பி - 46 தோல்விகள் (பெங்களூரு)

    டெல்லி கேப்பிடல்ஸ் - 45 தோல்விகள் (டெல்லி)

    கே.கே.ஆர் - 38 தோல்விகள் (கொல்கத்தா)

    மும்பை இந்தியன்ஸ் - 34 தோல்விகள் (மும்பை வான்கடே)


    • கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார்.
    • இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக சாஹல் செயல்பட்டு வருகிறார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 34-வது லீக் போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

    இது குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கூறியதாவது:-

    பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன்.

    புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை. மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பௌலிங் செய்து எங்களுடைய கப்பலை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன்.

    கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை. எனவே அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம்.

    ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். நீங்கள் மேட்ச் வின்னர் என்பதால் நமக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சஹாலிடம் கூறினேன். கம்பேக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

    • சர்வதேச போட்டியில் தாம்சன் ஆடியதில்லை.
    • நடுகள வீரரான தாம்சன் 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.

    இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.

    • ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார்.
    • நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.

    டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவரின் நான்காவது பந்தை வீசும்போது ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார். நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.

    மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கூட வைட் லைனில் பின்கால் வைத்து தான் பந்துவீசினார், ஆனால் அவருக்கு நோ பால் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர்.

    இந்நிலையில், புத்தூர் விதிகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசியுள்ளார் என்று நடுவர் அணில் சவுத்ரி விளக்கம் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதில், புத்தூர் தனது பின்னங்காலை வைட் லைனில் வைத்தார். ஆனால் பந்து வீசுவதற்கு முன்னாள் வைட் லைனில் இருந்து காலை தூக்கி விட்டார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு தான் அவர் பந்துவீசினார் என்று நடுவர் அணில் சவுத்ரி தெரிவித்தார்.

    • பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.
    • தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 181 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து லக்னோ எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன்- சுப்மன் கில் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தை (12 ஓவரில் 120 ரன்), அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி ரன் விகிதத்தை அதிகரிக்க தவறியது சறுக்கலுக்கு வழிவகுத்தது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (329 ரன்), ஜோஸ் பட்லர், கேப்டன் சுப்மன் கில், ரூதர்போர்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவேதியா இன்னும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 6 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றியை (லக்னோ, ஜதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) ருசித்து வலுவான நிலையில் உள்ளது. 5-வது ஆட்டத்தில் மட்டும் மும்பையிடம் தோல்வியை தழுவியது முந்தைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை சாய்த்தது. சூப்பர் ஓவரில் யார்க்கர்களாக போட்டு அமர்க்களப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கருண் நாயரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமாரும் நல்ல பார்மில் உள்ளனர். தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.

    மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப குஜராத் அணியும், 6-வது வெற்றியை தனதாக்கி முதலிடத்தில் நீடிக்க டெல்லி அணியும் முழு பலத்துடன் கோதாவில் குதிப்பதால், விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் டெல்லியும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    டெல்லி: பிளிஸ்சிஸ் அல்லது மெக்குர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா, முகேஷ் குமார்.

     

    ராஜஸ்தான்-லக்னோ மோதல்

    ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக உதை வாங்கியுள்ளது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஹெட்மயர் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் தடுமாறிய ஜெய்ஸ்வால் இப்போது அரைசதங்களாக நொறுக்குகிறார். இதே போல் மற்றவர்களும் ஒருசேர கைகொடுத்தால் எழுச்சி பெற முடியும். பந்து வீச்சில் ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    கடந்த ஆட்டத்தின்போது வயிற்று பகுதியில் காயம் அடைந்து பாதியில் வெளியேறிய கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாகி இருகிறது. அவர் ஆடமுடியாமல் போனால் முதல் 3 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை கவனித்த ரியான் பராக் அணியை வழிநடத்துவார். சாம்சன் காயம் குறித்து ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று கூறுகையில், 'சாம்சனுக்கு வயிற்று பகுதியில் லேசான வலி உள்ளது. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்கேன் அறிக்கையின் அடிப்படையில் அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

    லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (டெல்லி, பஞ்சாப், சென்னை அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (357 ரன்), மிட்செல் மார்ஷ், மார்க்ரம் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், அப்துல் சமத் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மிரட்டுகிறார்கள். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு புதிய தெம்பை கொடுக்கும்.

    சொந்த மைதானத்தில் முதலாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சாதிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் லக்னோ அணி வெற்றி வழியில் பயணிக்க வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியதில் ராஜஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்) அல்லது வைபவ் சூர்யவன்ஷி அல்லது சுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா.

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய்.

    போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.
    • பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக படிதார் 1000 ரன்களை கடந்தார்.

    ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 28 ரன்கள் அடித்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படிதார் முறியடித்துள்ளார். 30 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை படிதார் அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 31 போட்டிகளில் 1000 ரன்களை அடித்திருந்தார் .

    ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் (25 போட்டிகளில்) முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக 1000 ரன்களை கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார். 

    • AWAY கிரவுண்டில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
    • சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.

    குறிப்பாக AWAY கிரவுண்டில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி அவர்களின் HOME கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 4 ஆம் இடத்தில இருந்தாலும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி தொடர்ந்து தோற்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் திடீரென விலகினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஆர்தர் பில்ஸ் 2-0 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து, ஆர்தர் பில்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    ×