என் மலர்
விளையாட்டு
- மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முனீச்:
மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்புர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-8 (6-8) என இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லூசியானோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு:
ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
சுமார் 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தன.
கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் போராடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசினார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 95 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் யான்சேன், சஹல், அர்ஷ்தீப் சிங், பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
சுமார் 8.40 மணியளவில் நின்றது. பின்னர் போட்டி தொடங்குவதற்கான பணிகளை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர். பின்னர் மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பபடும், 9.45 மணிக்கு போட்டி தொடங்கும். 14 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன்படி 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவ வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயால்.
பஞ்சாப் கிங்ஸ்:-
பிரியான்ஷ் ஆர்யா, நெகல் வதேரா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், ஹர்ப்ரீத் பிரார், பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், சாஹல்.
- கே.எல். ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
- கே.எல். ராகுலின் பிறந்த நான் இன்று. பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் அதியா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
இன்று கே.எல். ராகுலுக்கு பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளில், தனது மகளுக்கு இவாரா (Evaarah) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவாரா என்றால் கடவுளின் பரிசு என அர்த்தம்.
- ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
- மாற்று வீரராக ஆயுஷ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இணைந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் ஏறக்குறைய முதல் பாதி போட்டிகளில் (7) விளையாடியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார். இதனால் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக இளம் வீரரான மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளதை உறுதி செய்யும் வகையில், சிஎஸ்கே போஸ்டர் வெளியிட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- ஆர்சிபி டீசர்ட் வாங்குவதால் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. ஒரு டீசர்ட் வாங்குவதால் ஆர்சிபி ரசிகர்கள் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக புமா தெரிவித்துள்ளது. விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.
இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆர்சிபி அணியுடன் ஒப்பந்தம் வைத்துள்ள புமா (PUMA) நிறுவனம் ஆகும். பெங்களூருவில் இருக்கும் 100 அடி சாலை, இந்திராநகர் அல்லது பிரிகேட் சாலையில் உள்ள புமா ஸ்டோர்களில் ஆர்சிபி - புமா டீ சர்ட் வாங்கும் ரசிகர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஸ்டோர்களில் டீ சர்ட் வாங்கும் ரசிகர்கள் ரஜத் படிதார், விராட் கோலி, குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார் மற்றும் சால்ட் ஆகியோருடன் VR photo booths மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
- குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.
அகமதாபாத்:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 35-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணியில் கேப்டன் அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், போரல், ஸ்டேப்ஸ், மிட் செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ரஷித்கான் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி 5-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோ 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
ராஜஸ்தான் 7 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. இந்த சீசனில் ராஜஸ்தான் திணறி வருகிறது. கடந்த 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ஹெட் மயர், ஹசரங்கா, ஆர்ச்சர், துருவ் ஜூரல் ஆகிய வீரர்கள் ராஜஸ்தான் அணியில் உள்ளனர்.
- சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
- அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.
- இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர்.
- பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர். இவர் முன்னதாக ஆர்யன் என்று அழைக்கப்பட்டார். இவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார். 2023-ல், பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக்கொண்டார். 23 வயதான அவர், இடது கை பேட்டர் ஆவார் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்.

இப்போது அனயா, மான்செஸ்டரில் வசிப்பதாகவும், கிரிக்கெட் விளையாடுவதாகவும், மேலும் பல சமூக ஊடகங்களில் தனது பயணத்தைப் பற்றிய வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எனது பாலின மாற்றத்திற்குப் பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினார்கள் என அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர். அவர்களுடைய மோசமான பக்கங்களில் நான் இடம்பெற விரும்பவில்லை. அதனால் நான் அந்த முழு சூழ்நிலையையும் தவிர்த்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னை ஆதரித்த சிலர் காலப்போக்கில் தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டனர்.
என அனன்யா கூறினார்.
- யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும்.
- ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும்.
மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறியதாவது:-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.
யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்.
என்று சேவாக் தெரிவித்துள்ளார்.






