என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ் திடீர் விலகல்
    X

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ் திடீர் விலகல்

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் திடீரென விலகினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஆர்தர் பில்ஸ் 2-0 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து, ஆர்தர் பில்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    Next Story
    ×