என் மலர்
விளையாட்டு
- 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் 6 நாடுகள் இடம் பெறும்.
2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசையில் பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக 1900-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.
- அபிஷேக் சர்மா 528 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் அபிஷேக் சர்மா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய இலக்கு. பவர்பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்குவித்து வருகிறார்.
இன்றைய போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 29 போட்டிகளில் 528 பந்துகளை சந்தித்து ஆயிரம் ரன்களை தொட்டார். இதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். பில் சால்ட் 599 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் 604 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
- தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 255 ரன்களிலும், தென்ஆப்பிரிக்கா 221 ரன்களிலும் ஆட்டமிழந்தன.
இதனைத்தொடர்ந்து 34 ரன்கள் முன்னிலையில் இந்தியா 'ஏ' 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 'ஏ' 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தனது ரன் கணக்கை தொடங்கினார். இருந்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர் டிஷெபோ மொரேகி பந்தில் ரிஷப் பண்ட் அடிக்கடி அடி வாங்கினார். குறிப்பாக மூன்று முறை உடல் மற்றும் ஹெல்மேட்டை பந்து பலமாக தாக்கியது.
இருந்தாலும் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். ஆனால் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கும்போது வலி ஏற்படுவதுபோல் உடல்களை அசைத்தார். இதனால் பயிற்சியாளர் மற்றும் பிசியோ ஆகியோர் இதற்கு மேல் களத்தில் நின்றால் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக அவரை வெளியேறும்படி வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் களத்தில் இருந்து வெளியேறினார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் 22-ந்தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, ரிஷப் பண்ட் கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்தார்.
- அபிஷேக் சர்மா இரண்டு முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
- சுப்மன் கில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார். இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார்.
3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்பு கிடைத்தது.
இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
அபிஷேக் சர்மா 13 பந்தில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்தில் 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
- மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.
100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
- பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சம்.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதிய இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 18.5 கோடி பேர் நேரலையில் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியையும் 18.5 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் கண்டுகளித்து உள்ளனர்.
இதன் மூலம் ஆண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையான பார்வைகளை மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றொரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதையும் சேர்த்து ஜியோஹாட்ஸ்டாரில் 44.6 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன.
கடந்த 3 உலகக் கோப்பைத் தொடரின் பார்வைகளையும் ஒன்றாக சேர்த்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் மூலம் தெளிவாகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பி ரிக்கா மோதிய இறுதிப் போட்டி சராசரியாக ஒரு நாளில் ஐ.பி.எல். தொட ருக்கு கிடைக்கும் பார்வை களைக் காட்டிலும் அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 T20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார்.
- வலியால் அவதிப்பட்ட ஷ்ரேயாஸ் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாட்களிலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காயத்திருந்து குணமடைந்த பின்பு இந்திய வீரர் ஸ்ரேயஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
- ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெறுகிறது.
- இதில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
ஏதென்ஸ்:
ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-0, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பிரிஸ்பேன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலையாக அனிசிமோவா 2வது 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-3 என கைப்பற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சபலென்கா, ரிபாகினாவை எதிர்கொள்கிறார்.
- மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.
துபாய்:
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதையடுத்து, ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், வரும் 2029-ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2029-ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.






