என் மலர்
விளையாட்டு
- இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அடிலெய்டு:
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடதா ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாடுவார் என உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
- வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
- இந்த ஆட்டம் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் 3-வது இடமான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் அர்ஜென்டினா சிறந்த அணி என்பதால் கடுமையாக போராட வேண்டும்.
இந்திய அணி 'லீக்' சுற்றில் சிலி (7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தது. அரைஇறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
அர்ஜென்டினா அணி 'லீக்' சுற்றில் ஜப்பான் (4-1), சீனா (3-1) ஆகியவற்றை வீழ்த்தியது. நியூசிலாந்துடன் (3-3) 'டிரா' செய்தது. கால்இறுதியில் நெதர்லாந்தை (1-0) தோற்கடித்தது. அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்றது.
முன்னதாக நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து (மாலை 3 மணி), 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (மதியம் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் 9-வது இடத்துக்கு இங்கிலாந்து-அயர்லாந்து (இரவு 8 மணி), 11-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5.30 மணி), 13-வது இடத்துக்கு ஜப்பான்-மலேசியா (மாலை 3 மணி), 15-வது இடத்துக்கு சிலி-சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நேற்றைய போட்டி முடிவில் ஆஸ்திரியா, வங்கதேசம், தென்கொரியா, சீனா, எகிப்து, கனடா, நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் முறையே 17 முதல் 24-வது இடங்களை பிடித்தன.
- வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர்
- 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலம் வருகிற 16-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. இந்த ஏலம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். 10 அணிகளும் 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும்.
வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர். தற்போது வெளியான இறுதிப் பட்டியலில் 350 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். 1005 வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 350 வீரர்களில் 224 விளையாடத இந்தியர்களும் 16 ஏற்கனவே விளையாடிய இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் டீ காக் உள்பட 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன. குயின்டன் டீ காக்கிற்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும்.
கேமரூன் கிரீன், லிவிஸ்டன், பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்பட 45 வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.
- கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் 8 வீரர்கள் தங்களுக்குள் தலா இரு முறை மோத வேண்டும்.
சென்னை:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேசை எதிர்கொள்ளும் வீரர் யார் என்பதை கண்டறிய கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.
8 வீரர்கள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு அமெரிக்காவின் பாபியானோ கருனா, ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் மதியாஸ் புளுபாம், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ், சீனாவின் வெய் யி ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 7-வது வீரராக அந்த போட்டிக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றிருப்பதாக சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) நேற்று அறிவித்தது. 2025-ம் ஆண்டுக்கான 'பிடே' செஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு வீரரின் சிறந்த 7 போட்டிகளின் முடிவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 115.17 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பிரக்ஞானந்தா அதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கான வாய்ப்பை தட்டிச் சென்றார். மற்றொரு இடம் அமெரிக்க முன்னணி வீரர் ஹிகரு நகமுராவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் 8 வீரர்கள் தங்களுக்குள் தலா இரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும் வீரர் உலக சாம்பியனை சந்திப்பார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இந்த தடவை இந்திய தரப்பில் பிரக்ஞானந்தா மட்டுமே தகுதி பெற்றுள்ளார். அதே சமயம் பெண்களுக்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இந்தியாவில் இருந்து திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருக்கிறார்கள்.
- 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.
- 2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி மொத்தம் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அவற்றில் இந்த தொடரும் ஒன்று. உலகக் கோப்பை போட்டிக்கான கனகச்சிதமான அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் பக்கபலமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. அவர் கடைசியாக களம் கண்ட 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் வலிமையடையும். 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய அவர் அண்மையில் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரிலும் அவரது அதிரடி ஜாலத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பும்ரா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா இடையே போட்டி நிலவுகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்.
2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது தயாரிப்பு, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனே தொடங்கி விட்டது. அதில் இருந்து சில புதிய விஷயங்களை முயற்சித்து பார்த்துள்ளோம். அவை அணிக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. கடைசியாக விளையாடிய 5-6 தொடர்களில் ஒரே மாதிரியான அணி கலவையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதாவது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ததில்லை. எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை தொடருவோம்' என்றார்.
தென்ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டிவால்ட் பிரேவிஸ், குயின்டான் டி காக், கார்பின் பாஷ், ரீஜா ஹென்ரிக்ஸ் என 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய அதிரடி பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். கேஷவ் மகராஜ், மபகா, இங்கிடி, மார்கோ யான்சென் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளனர்.
2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்கு என்று பிரத்யேக வியூகம் எதுவும் தீட்டவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே குதூகலப்படுத்தும் வடிவமாகும். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டி நடக்கும் கட்டாக்கில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இரு தோல்வியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்தவையாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், இங்கிடி, அன்ரிச் நோர்டியா.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது.
- இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்த தளம் 17 மொழிகளில் நாடகங்கள், திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை வழங்குகிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரபலமானது.
ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை 3 பில்லியன் மதிப்பில் பெற்றிருந்தது. இதில் டி20 உலகக் கோப்பை 2024 (ஏற்கனவே நடந்தது), சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 போன்ற முக்கிய போட்டிகள் அடங்கும். இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலை ஸ்ட்ரீமிங் செய்யலாம், மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
இந்நிலையில், நிதி இழப்புகள் காரணமாக (குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட இழப்புகள்), ஜியோஸ்டார் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது.
இதனால், ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது. இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது. புதிய ஒளிபரப்பாளர் கிடைக்காவிட்டால், அவர்கள் உரிமைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
- டிசம்பர் மாதத்தில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
- குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் நிறைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. விளையாட்டு போட்டிகளின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளித்த வீரர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் மறைந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களின் தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
ஜனவரி மாதத்தில் மறைந்த வீரர்கள் குறித்த தகவலை பார்க்கலாம். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரரான கிரெக் பெல் தனது 94 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார். இவர் 1956-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து உரிமையாளர் (பிலடெல்பியா ) ஹரோல்ட் காட்ஸ் (Harold Katz), 87 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார்.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்து அர்னால்டோ கிருவாரின் (86 வயது)(Arnaldo Gruarin). ரக்பி யூனியன் வீரரான இவர் ஜனவரி 28-ந் தேதி மறைந்தார்.

ரஷிய நாட்டை சேர்ந்த ஜோடி ஸ்கேட்டர் விளையாட்டு வீராங்கனை எவ்ஜெனியா ஷிஷ்கோவா (Evgenia Shishkova). இவர் தனது 52 வயதில் ஜனவரி 29-ந் தேதி காலமானார். இவர் 1994-ம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார்.

மே
நினோ பென்வெனுட்டி (Nino Benvenuti), 87 வயது, இத்தாலியன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் தங்கம் 1960, உலக சாம்பியன்). மறைந்தது மே 20.

ஜிம் இர்சே (Jim Irsay), 65 வயது, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து உரிமையாளர் (இண்டியானாபோலிஸ் கொல்ட்ஸ்), மறைந்தது மே 21.
ஜூன்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி (Dilip Doshi). சுழற்பந்து வீச்சாளராக இவர் தனது 77 வயதில் ஜூன் 23-ந் தேதி மறைந்தார்.

டியாகோ செகுய் (Diego Seguí), 87 வயது, கியூபன், பேஸ்பால் பிட்சர், மறைந்தது ஜூன் 24.

டக் எக்கர்ஸ் (Doug Eggers), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர், ஜூன்.
ஜூலை
பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (Felix Baumgartner), 56, ஆஸ்திரியன், எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் (ஸ்கைடைவர்), மறைந்தது ஜூலை 17.
ஹல்க் ஹோகன் (Hulk Hogan), 71, அமெரிக்கன், மல்யுத்த வீரர், மறைந்தது ஜூலை 24.

செப்டம்பர்
கென் டிரைடன் (Ken Dryden), 78, கனடியன், ஐஸ் ஹாக்கி கோல்கீப்பர் (ஸ்டான்லி கப் வென்றவர்), மறைந்தது செப்டம்பர் 5.

நவம்பர்
கென்னி ஈஸ்லி (Kenny Easley), 66, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர் (சீஹாக்ஸ்), மறைந்தது நவம்பர் 14.

ராட்னி ரோஜர்ஸ் (Rodney Rogers), 54, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர் (NBA), மறைந்தது நவம்பர் 21.

ஜான் பீம் (John Beam), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து பயிற்சியாளர், நவம்பர்.
மற்ற மாதங்களை விட டிசம்பரில் அதிக வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி 31 வீரர்கள் இந்த மாதத்தில் மறைந்துள்ளார். குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் மறைந்துள்ளனர்.
டிசம்பர்
1. ஜிம்மி மரியானோ (Jimmy Mariano), 84, பிலிப்பைன்ஸ், கூடைப்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர், டிசம்பர் 7.
2. வோலோடிமிர் சிசென்கோ (Volodymyr Sysenko), 63, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 7.
3. டாம் ஹிக்ஸ் (Tom Hicks), 79, அமெரிக்கன், விளையாட்டு உரிமையாளர் (லிவர்பூல் FC, டல்லாஸ் ஸ்டார்ஸ்), டிசம்பர் 6.
4. நிக் ஜோனைட்ஸ் (Nick Joanides), 55, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 6.
5. விக்டர் மிரோஷ்னிசென்கோ (Viktor Miroshnichenko), 66, உக்ரைன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் வெள்ளி 1980), டிசம்பர் 6.
6. அப்துல் ரஷீட் (Abdul Rashid), 46, பாகிஸ்தான், ஹர்டில்ஸ் வீரர் (ஒலிம்பிக் 2008), டிசம்பர் 6.
7. மனோலோ வில்லனோவா (Manolo Villanova), 83, ஸ்பெயின், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 6.
8. மைக்கேல் அன்னெட் (Michael Annett), 39, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 5.
9. வாசிலே கரவுஸ் (Vasile Carauș), 37, மோல்டோவன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
10. ஸ்டீவ் ஹெர்ட்ஸ் (Steve Hertz), 80, அமெரிக்கன், பேஸ்பால் வீரர், டிசம்பர் 4.
11. ராய் கிரேமர் (Roy Kramer), 96, அமெரிக்கன், கல்லூரி புட்பால் பயிற்சியாளர், டிசம்பர் 4.
12. மேபெல் போச்சி (Mabel Bocchi), 72, இத்தாலியன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 4.
13. அன்டோனியோ வர்கியு (Antonio Vargiu), 86, இத்தாலியன், பீல்ட் ஹாக்கி வீரர் (ஒலிம்பிக் 1960), டிசம்பர் 3.
14. மொஹம்மது ரஹ்மதுல்லா (Mohammed Rahmatullah), 87, இந்தியன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 3.
15. லூயிஸ் அன்டோனியோ சில்வா டாஸ் சான்டோஸ் (Luiz Antônio Silva dos Santos), 55, பிரேசிலியன், கால்பந்து ரெஃப்ரீ, டிசம்பர் 3.
16. மௌரிசியோ தெர்ம்ஸ் (Maurizio Thermes), 86, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 3.
17. அலெக்ஸ் சான்செஸ் (Alex Sánchez), 95, கோஸ்டா ரிகன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
18. மாட்டி சுண்டெலின் (Matti Sundelin), 91, பின்னிஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 5.
19. மௌஸ்தபா அலி (Moustafa Ali), 59, எகிப்தியன்-கனடியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
20. அனடோலி பெல்யாயேவ் (Anatoli Belyayev), 73, பெலாருசியன், ஐஸ் ஹாக்கி வீரர், டிசம்பர் 2.
21. மார்வின் ஹின்டன் (Marvin Hinton), 85, இங்கிலீஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
22. எஸாவ் கன்யெண்டா (Essau Kanyenda), 43, மலாவியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
23. ஆர்காடியோ வென்டூரி (Arcadio Venturi), 96, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.
24. எல்டன் கேம்ப்பெல் (Elden Campbell), 57, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 1.
25. ராபின் ஸ்மித் (Robin Smith), 62, தென்னாப்பிரிக்கா-இங்கிலீஷ், கிரிக்கெட் வீரர், டிசம்பர் 1.
26. ஹென்னி வான் சில் (Hennie van Zyl), 89, தென்னாப்பிரிக்கா, ரக்பி யூனியன் வீரர், டிசம்பர் 1.
27. டெனிஸ் டர்னியன் (Denis Durnian), 75, இங்கிலீஷ், கோல்ஃப் வீரர், டிசம்பர் 1.
28. இபோ எல்டர் (Ebo Elder), 46, அமெரிக்கன், குத்துச்சண்டை வீரர், டிசம்பர் 1.
29. கேப்ரியல் மோய்சியானு (Gabriel Moiceanu), 91, ரோமானியன், சைக்கிள் வீரர் (ஒலிம்பிக் 1960, 1964), டிசம்பர் 1.
30. வோலோடிமிர் முன்ட்யான் (Volodymyr Muntyan), 79, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 1.
31. நிகோலா பீட்ராங்கெலி (Nicola Pietrangeli), 92, இத்தாலியன், டென்னிஸ் வீரர், டிசம்பர் 1.
- டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
- சுப்மன் கில் முழுவதுமாக குணமடைந்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், நாளை நடக்கவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடும் லெவனில் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் கடந்த 3-ந் தேதி 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் கடந்த 3-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்சின் போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்துள்ளது. இதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுல் கூற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
- நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- பரபரப்பாக சென்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் நடந்த டி20 தொடரையும் அடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான ஆட்டத்தில் டிரா ஆனது.இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் 3 பேர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதன்படி சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாட்னர், வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி, மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளனர்.
ஹென்றி, ஸ்மித் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தனர். மிட்செல் சாடனர் முதல் போட்டிக்கு முன்பே காயத்தால் விளையாடாமல் இருந்தார்.
இவர்கள் விலகியது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
- ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம்.
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 271 ரன் இலக்கை இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதமும் (116 ரன்), ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அரைசதமும் விளாசினர். வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.
இதனையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் நாளை நடக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களை பற்றி சொன்னார்கள். ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் (டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் அதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
- கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது.
மும்பை:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.
மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார்.
டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.






