என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
    • உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.

    ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.
    • .பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் டாப்-10 இடத்திற்குள் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பகர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா சார்பில் சிராஜ் 4வது இடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

    இதேபோல், டி20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார்.

    • முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
    • கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இப்போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் (6வது இடம்) உள்ளது.

    லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேறுவது அடுத்த போட்டிகளின் முடிவை சார்ந்துள்ளது.

    இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில், தென்கொரியா-மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டியில் மலேசிய அணி 1-0 என வெற்றி பெற்றது. முதல் பாதியில் 22வது நிமிடத்தில் மலேசியா பீல்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அடுத்து இரு அணிகளும் கடைசி வரை போராடியும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    எனவே, ஜப்பான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, கடைசி லீக் போட்டியை சார்ந்துள்ளது. கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
    • 59வது நிமிடத்தில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை முறியடித்த சீனா ஆறுதல் கோல் அடித்தது.

    சென்னை:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம். இப்போட்டியின் துவக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பான் அணிக்கு 8வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் யமடா கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. பதில் கோல் அடிக்கும் முயற்சியில் சீன வீரர்கள் முன்னேறினர். ஆனால் அவர்களின் முயற்சியை ஜப்பான் வீரர்கள் முறியடித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி வாய்ப்புகள் கிடைத்தும் கோலாக்க முடியவில்லை.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜப்பான் வீரர் புகுடா கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 59வது நிமிடத்தில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை முறியடித்த சீனா ஆறுதல் கோல் அடித்தது. இந்த கோலை சோஜு பதிவு செய்தார். இறுதியில் 2-1 என ஜப்பான் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று 6வது இடத்தில் உள்ளது.

    லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளின் முடிவைப் பொருத்து ஜப்பான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

    இன்று நடைபெறும் போட்டியில் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும். 

    • உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அக்டோபர் 15ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு பதில் 12ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதேபோல் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வங்காளதேசம்-நியூசிலாந்து ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுளள்து. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

    லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி காலை 10:30 மணிக்கு ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணி புனேவில் மோதுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடுகின்றன.

    நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் 11ம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

    • போட்டிகளில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும்.

    கோவை:

    மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக 'ஈஷா கிராமோத்சவம்' என்ற கிராமிய விளையாட்டு திருவிழாவை சத்குரு 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். வெறும் 4 தாலுக்காவில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் இப்போட்டிகளில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இத்திருவிழாவில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்குமான கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்படும். பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், தொழில் முறை வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

    முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காக இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 வயதை கண்ட கிராமப்புற மக்கள் தங்கள் கிராமத்தில் ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    ஆக.12-ம் தேதி தொடங்கி செப்.23-ம் தேதி வரை கிளெஸ்டர், டிவிஸினல், பைனல் என 3 கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இறுதிப் போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார். மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
    • ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

    இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
    • தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் ‘டிரா’ செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்றும், மலேசியா 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் வாய்ப்பை இழந்தது.

    நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜப்பான் 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் இந்த 3 அணிகளும் இருக்கின்றன.

    இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா( மாலை 4 மணி), மலேசியா-தென் கொரியா (மாலை 6.15 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்கிறார்.

    தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் 'டிரா' செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும். ஜப்பான் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தோற்றாக வேண்டும்.

    அப்படி நிகழ்ந்தால் 3 அணிகளும் 5 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கோல்கள் வித்தியாசத்தில் ஜப்பான் பின்தங்கி காணப்படுகிறது.

    ஜப்பான்-சீனா அணிகள் மோதும் போட்டிக்கு பிறகே கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம் நடக்கிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் இரு அணிகளும் விளையாடும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    • 11-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன.
    • 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    வெலிங்டன்:

    9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டகள் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய அணி கள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன. 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16-ந்தேதிகளிலும், இறுதிப் போட்டி 20-ந்தேதி யும் நடக்கிறது.

    • எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.
    • நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    கயானா:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.

    பிரெண்டன் கிங், 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோமன் போவெல் 19 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 83 ரன்னும் (10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 37 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் 2 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றது. இதில் தோற்று இருந்தால் 20 ஓவர் தொடரை இழந்து இருக்கும். வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது என்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பேசி இருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு விளையாடினோம்.

    நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததால் எங்கள் பந்து வீச்சாளர்களை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக அக்ஷர் படேலுக்கு அவருக்கு உரிய 4 ஓவர்களையும் முழுமையாக வழங்க முடிந்தது.

    நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க நினைத்தால் எனது பந்தில் அடித்துக் கொள்ளட்டும் என்றே நான் காத்திருந்தேன். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    7 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இந்த திட்டம் தவறாக போகும் பட்சத்தில் அதற்கு நாங்கள் தான் பொறுப்பாகும். முதல் 7 பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை சரியாக செய்து விட்டால் 8-வது வீரருக்கு வேலை இருக்காது என்பதே எனது கருத்தாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மாவும் மிக சிறப்பாக விளையாடினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    • ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன.
    • இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

    நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


    ஓய்வு நாளான நேற்று அத்தனை கேப்டன்களும் போட்டோஷூட் நடத்தப்பட்டது. ஹாக்கி அணி கேப்டன்கள் 6 பேர் வேஷ்டி சட்டையுடன் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் கீழ் தளத்தில் உள்ள விஐபி அறையில் காத்திருந்தனர். விளையாட்டுத்துறையின் செயாலளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத் ரெட்டி மற்றும் ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தனர்.

    இரவு 7:30 மணிக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் வேஷ்டி சட்டையோடு மைதானத்திற்கு வந்து அத்தனை கேப்டன்களுக்கும் கை குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


    இதெல்லாம் முடிந்த பிறகு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்தனை பேரும் சென்று வெற்றிக்கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், கேப்டன்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு உதயநிதி விடைபெற்றார்.


    தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×