என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Udayanidhi Stalin"
- "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
- போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன.
பிரதமர் மோடியுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
"கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.
அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.
வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கினார்.
- தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று முதல் தொடங்கியது.
புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 47-வது புத்தகக் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றி வருகிறார்.
தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 21ம் தேதிவரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
- கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
சென்னை, பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறறது.
இந்நிகழ்ச்சியில், சுமார் 2200 பேருக்கு புத்தாடை, அரிசி, மளிகைப் பொருட்கள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பெரு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, தாயகம் கவி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீங்கம் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லீம் என்று அழைத்தால் நான் முஸ்லீம். எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்" என்றார்.
- தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
- 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார்
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
அமைச்சர் உதயநிதி நெல்லை வருகை
இதையொட்டி மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
மேலும் அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
அதன்படி வருகிற 27-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
உற்சாக வரவேற்பு
இதற்காக நாளை (வியாழக்கிழமை) மாலையில் விருதுநகரில் இருந்து காரில் நெல்லைக்கு அவர் வருகிறார். அப்போது அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தாழையூத்து பண்டாரகுளம் அருகே கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்குள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விடுதியில் அவர் இரவில் தங்குகிறார்.
27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார். பின்னர் மாதா மாளிகையில் நடைபெறும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
நூலகம் திறப்பு
தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.டி.சி.நகர் பகுதியில் இளைஞரணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வழியாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்திற்கு அமைச்சர் உதயநிதி வருகிறார். அங்கு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
ஆய்வு கூட்டம்
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர் மாலையில் பாளை திருமால் நகரில் நூலகத்தை திறந்து வைத்துவிட்டு குமரி மாவட்டத்திற்கு காரில் புறப்படுகிறார்
- வருகிற 18-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.
- நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை அழைத்து பங்கேற்க வைக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.அவர் பேசியதாவது:-
அமைச்சர் உதயநிதி வருகை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி வருகிற 18-ந்தேதி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி மாநில செய லாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த முன்னோடிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி எழுச்சியு டன் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து பங்கேற்க வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில் அதிக அளவு இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஞானதிரவி யம் எம்.பி., மாவட்ட பொரு ளாளர் ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, ராதா புரம் கிழக்கு ஒன்றிய செய லாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் சுடலைக்கண்ணு, அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், பகுதி செயலா ளர்கள் வேலன்குளம் முருகன், போர்வெல் கணேசன், இளைஞர் அணி செயலாளர் ஜான் ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- தமிழக வீரர்கள் 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இன்றுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.
ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடி சாதனை படைத்த வீரர்- வீராங்கனைகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.
குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.
நம் வீரர்- வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன.
- இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஓய்வு நாளான நேற்று அத்தனை கேப்டன்களும் போட்டோஷூட் நடத்தப்பட்டது. ஹாக்கி அணி கேப்டன்கள் 6 பேர் வேஷ்டி சட்டையுடன் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் கீழ் தளத்தில் உள்ள விஐபி அறையில் காத்திருந்தனர். விளையாட்டுத்துறையின் செயாலளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத் ரெட்டி மற்றும் ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தனர்.
"ஹாக்கி வீரர்களுடன், வேட்டி, சட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!"#UdhayanidhiStalin | #Hockey | #Chennai | #KalaignarSeithigal | @Udhaystalin pic.twitter.com/NvxTSiRHhu
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 8, 2023
இரவு 7:30 மணிக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் வேஷ்டி சட்டையோடு மைதானத்திற்கு வந்து அத்தனை கேப்டன்களுக்கும் கை குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதெல்லாம் முடிந்த பிறகு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்தனை பேரும் சென்று வெற்றிக்கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், கேப்டன்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு உதயநிதி விடைபெற்றார்.
தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சிறப்பு விருந்தி னர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் முடிந்ததை தொடர்ந்து இனி அடுத்து சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
முதலமைச்சர் கோப்பை போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் களம் நமதே என்ற வீடியோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் கோப்பைக்கான லோகோவும் வெளியி டப்பட்டன.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் கோப்பை க்கான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.
நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உடனே முதல் கையெழுத்து போட்டது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி திட்டத்திற்கு தான். மாண வர்கள் ,மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் , மாற்று திறனாளிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் 1979 விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் இன்று பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதை பெருமை கொள்கிறேன்.
முதலமைச்சர் கோப்பை போட்டியை ஒரு முன்னெடுப்பு இயக்கமாக மாற்றி உள்ளோம்.
திறமையானவர்கள் எந்த இடத்திலும் இருப்பார்கள். அதனை கருத்தில் கொண்டு ஒரு ஊராட்சி கூட விடுபடாமல் முதலமைச்சர் கோப்பை போட்டியை நடத்தி உள்ளோம்.
பொதுவாக போட்டி என்றால் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து என்று இல்லாமல் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் கபடி, சிலம்பம் உள்பட 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் முடிந்ததை தொடர்ந்து இனி அடுத்து சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் 27500 வீரர்- வீராங்கனைகள் விளையாட உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 674 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாதம் 30 ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளது. சென்னையில் மாற்றுத்திறனாளி வீரர்- வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை 164. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் 180 மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
களம் நமதே என்ற வீடியோவில் 50 சதவீதம் தஞ்சாவூர் பகுதியில் தான் எடுக்கப்பட்டது.
அடுத்ததாக சென்னையில் ஏசியா ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.
பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகளை மற்ற பாடங்களுக்கு கடன் வாங்காதீர்கள். முடிந்தால் மற்ற பாட வேளைகளை விளை யாட்டு பாட வேளைக்காக கடன் கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பாபு நன்றி கூறினார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
- அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர வேண்டும் என கூறி இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
- மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேர்காணல் நடைபெற்றது.
- மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நேர்காணலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.
அவர் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.
முன்னதாக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்பட திரளான தி.மு.க.வினர் வரவேற்றனர்.
- வீரர்-வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
- பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர்-வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச் சண்டை அரங்கினை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தார்.
உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
+2
- சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநகர பஸ்கள், பஸ் நிலையங்களில் 2330 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
- பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும்.
சென்னை:
பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவியுடன் மாநிலங்களில் 'நிர்பயா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 2 கட்டமாக பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 500 பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2-ம் கட்டமாக ரு.72.25 கோடி ரூபாய் செலவில் 2500 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்தன. அதனுடன் பணிமனைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 66 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன.
அதில் இதுவரை 1830 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் நிலையங்கள், பணிமனைகள் என மொத்தம் 63 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளது.
ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட 500 பஸ்களுடன் சேர்த்து இதுவரை 2330 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் தலா ஒரு வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒலிப்பெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது 'தானியங்கி வீடியோ ரெக்கார்டர்' 1 நிமிட வீடியோவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.
அதேநேரத்தில் பஸ்சில் உள்ள ஒலிப்பான் ஒலிக்கும். அதன்மூலம் பஸ் டிரைவர் பஸ்சை எச்சரிக்கையுடன் நிறுத்தலாம். குற்றவாளிகளை கண்டக்டர் கண்டறியலாம். அதேநேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்படும். அதன்மூலம் பஸ்சில் உள்ள ஜி.பி.எஸ். வசதியால் பஸ்சின் இருப்பிடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
பஸ்களில் இருந்து பெரும் புகார்களை கண்காணிப்பதற்காக சென்னை பல்லவன் இல்லத்தில் 40 அடி நீளம், 7 அடி உயரம் உள்ள காட்சித் திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு பங்கேற்றனர்.
இந்த கட்டுப்பாட்டு அறையில் 16 கணினி இயக்குவோர் பணி புரிகின்றனர். இதன் செயல்பாடுகள், நேற்று முதல் தொடங்கின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்