என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udayanidhi stalin"

    • ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன.
    • இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

    நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


    ஓய்வு நாளான நேற்று அத்தனை கேப்டன்களும் போட்டோஷூட் நடத்தப்பட்டது. ஹாக்கி அணி கேப்டன்கள் 6 பேர் வேஷ்டி சட்டையுடன் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் கீழ் தளத்தில் உள்ள விஐபி அறையில் காத்திருந்தனர். விளையாட்டுத்துறையின் செயாலளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத் ரெட்டி மற்றும் ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தனர்.

    இரவு 7:30 மணிக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் வேஷ்டி சட்டையோடு மைதானத்திற்கு வந்து அத்தனை கேப்டன்களுக்கும் கை குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


    இதெல்லாம் முடிந்த பிறகு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்தனை பேரும் சென்று வெற்றிக்கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், கேப்டன்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு உதயநிதி விடைபெற்றார்.


    தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாழை படம் பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!

    'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

    விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.

    • நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள்.
    • மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பவள விழாவில் 75 வயது நிரம்பிய கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத் தட்ட ரூ.50 கோடிக்கு மேல் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு உள்ளது என்றால் உலகத்திலேயே ஒரே ஒரு இயக்கம் எது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    கலைஞரின் நூற்றாண்டை சென்ற ஆண்டு சிறப்பாக கொண்டாடி முடித்தோம். கலைஞரின் நூற்றாண்டில் பெருமையாக சொல்கிறோம். 5 முறை கலைஞர் தமிழகத்தை ஆண்டவர். அதற்கு காரணம் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகள்தான்.

    நீங்கள் இல்லாமல் கலைஞர் கிடையாது. நீங்கள் இல்லாமல் அந்த வெற்றி கிடையாது. உங்களின் உழைப்பு உங்களின் ரத்தம் தான் ஒவ்வொரு வெற்றியையும் கழகத்திற்கு தேடி தந்திருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் காரணம். இந்த வெற்றிக்கான காரணங்கள் மூன்று சொல்வேன். முதல் காரணம் என்ன வென்றால், பிரதமர் நரேந்திர மோடி. அவர்தான் நமக்கு இந்த வெற்றியை தேடி கொடுத்தார்.

    நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போனேன். கிட்டத்தட்ட 23 நாட்கள் பயணம் செய்து அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன்.

    அப்போது அவர்களிடம் பா.ஜ.க.வின் மீதான வெறுப்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தவர் பிரதமர் மோடிதான்.

    சென்னையில் தமிழ்நாட்டில் வெள்ளம், மழை, புயல் வந்த போது ஒருமுறை கூட வந்து எட்டிப் பார்க்காத மோடி தேர்தல் அறிவித்தவுடன் 8 முறை தமிழகம் வந்தார். மாதத்திற்கு 4 முறை வந்து விட்டு போனார்.

    இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் பிரசாரமே முடிந்து விட்டது. அப்போதும் அவர் இங்கு வந்து கன்னியாகுமரியில் விவேகானந்தர் மடத்தில் சென்று தியானம் செய்தார். அவரின் பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம். தமிழ்நாட்டில் என்றைக்குமே வேகாது.

    நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள். இப்போதும் அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். கல்வி உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கி றோம்.

    2-வது காரணம் கழக ஆட்சி அமைந்து கடந்த 3½ வருடங்களில் நம் தலைவர் செய்திருக்கிற மக்கள் பணிகள் சாதனைகள்தான் காரணம்.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மகளி ருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. இந்த திட்டத் தின் மூலம் கிட்டத்தட்ட 3½ வருடத்தில் மட்டும் 520 கோடி பயணங்களை மக ளிர் மேற்கொண்டு இருக்கி றார்கள். ஒவ்வொரு மக ளிரும் மாதந்தோறும் கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் சேமிக் கிறார்கள்.

    அடுத்த திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்க கூடிய 20 லட்சம் குழந்தை களுக்கு தரமான காலை உணவு வழங்கப்படுவது. இதை மற்ற மாநிலங்களும் இப்போது செயல்படுத்த தொடங்கி இருக்கின்றன. அதே போல் புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப் புதல்வன் திட்டம். கல்வி உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படு கிறது.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதை நிறை வேற்றவே முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் தலைவர் இதை செயல்ப டுத்தினார். இப்போது 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    சில இடங்களில் குறைகள் இருக்கிறது. எங்களுக்கு வரவில்லை என்று கோரிக்கை வைத்திருக்கி றார்கள். நான் சுற்றுப்பயணம் செல்லும் போது மகளிர் கேட்கிறார்கள். விரைவில் அதையும் சரி செய்து நம் தலைவர் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகையை கொடுப்பார்.

    3-வது காரணம் கழகத் திற்காக உழைத்த உடன்பி றப்புகள். நம் வெற்றிக் கூட்டணி. இது மிக மிக ஒரு நல்ல கூட்டணி.

    நம் தலைவர் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி கூட்டணி அமைத்து அந்த கூட்டணியை அரவணைத்து கொண்டு போகிறார். அதுதான் மிகப்பெரிய காரணம். கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் மீண்டும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
    • நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.

    தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.

    அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.

    தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.

    அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர். 

    • உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
    • சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.


    அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.

    சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×