என் மலர்
நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh Poiyamozhi"
- தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
சென்னை:
நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ந் தேதிவரை நடக்க இருக்கிறது.
சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) போராடி வருகிறது.
கடந்த 10-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்திய டிட்டோ ஜாக் வருகிற 30, அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
இதையடுத்து அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்திற்கு அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கே.பி.ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், சண்முகநாதன், காமராஜ், ஜெகநாதன், ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். டிட்டோஜாக் கோரிக்கையில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியும் என்பதை விளக்கினார்கள்.
அமைச்சரும் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் சுழல்முறை தலைவர் காமராஜ் நிருபர்களை சந்தித்தார்.
டிட்டோஜாக் கோரிக்கைகள் குறித்து எங்களை அழைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிதி சார்ந்த பணி சார்ந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினோம்.
அரசாணை 243-யை ரத்து செய்வது பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் எடுத்து சொன்னோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியங்கள் முரண்பாடு பற்றியும் எடுத்து கூறினோம்.
இவற்றை அமைச்சர் புரிந்து கொண்டு முதல்-அமைச்சரிடம் இதை தெரிவித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
27-ந் தேதி பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க செல்லும் போது கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதியை பெற வலியுறுத்த இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி உங்கள் கோரிக்கைகளில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியுமோ அதை முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று எங்களுக்கு வாக்கு றுதி அளித்தார். அதை ஏற்று கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
- இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று பள்ளிக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் காஞ்சீபுரம், உத்தரமேரூர் பகுதியில் நேற்று பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வுகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது . இதனால் அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சரியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
- சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் நேற்று தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24-க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகைகள் பாலம், குரங்கு பாலம், பீம் ஏறுதல், டயர் டனல், தீ பள்ளம், துப்பாக்கிச் சுடுதல், அம்பு எறிதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
- சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.






