என் மலர்
தேர்தல் செய்திகள்


நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார்.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.
வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தன்னை கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கட்சி தலைமையிடம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் குமரவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது என அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CKKumaravel #MNM #KamalHaasan

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. #CKKumaravel #MNM #KamalHaasan
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இன்று மீதம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக பா.ம.க. துணை தலைவர் அ.வைத்திலிங்கம், திண்டுக்கல் வேட்பாளராக பா.ம.க. துணை பொது செயலாளர் க.ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். #LSPolls #PMK
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது ஊழியர்கள் கூறும்போது, “அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறினர்.
மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆக்சிஸ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி பெற்று சான்றிதழ் கொடுத்ததும் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

இதையடுத்து ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.
தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LSPoll #TNCEO
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.
காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.
சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.
தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.
அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

கங்கை நதியில் சுமார் 140 கிலோமீட்டர் தூரத்துக்கு படகில் செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். குறிப்பாக, கங்கை நதியை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மீனவ மக்கள் மற்றும் ராஜபுத்திர இன மக்களை அவர் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றுகிறார்.
இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தியை திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள மானியா காட் என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். #PriyankaGandhi #Gangayatra #LSpolls






