search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu CEO"

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் வரை ஆகும். தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.

    வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் 13 இடங்களில் வருகிற 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுவது பற்றிய விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-



    தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டுபோட வந்த வாக்காளர்களுக்கு கை விரலில் மை வைத்துவிட்டு ஓட்டு போட அனுமதிக்காமல் வெளியே விரட்டியதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டி பட்டியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அது போல கடலூர், பூந்தமல்லியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று இந்த 10 இடங்களிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே 46 இடங்களில் வாக்குப்பதிவின்போது 3 விதமான தவறுகள் நடந்ததாக தெரிய வந்தது.

    1. மாதிரி வாக்குப்பதிவு நடத்தும்போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டு விட்டனர்.

    2. சில தொகுதிகளில் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டுகளை அப்புறப்படுத்தவில்லை.

    3. மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்து இருந்தனர்.

    இதை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருந்தோம். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இந்த 46 இடங்களில் 3 இடங்களில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று மாலை உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மீதமுள்ள 43 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட மாட்டாது. மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஒன்று பாராளுமன்றத்துக்கும் மற்றொன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும்.

    பண்ருட்டி, ஈரோடு ஆகிய 2 இடங்களில் நடைபெறும் மறுவாக்குப்பதிவில் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.

    கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக நாங்கள் தேனிக்கும், ஈரோடுக்கும் அனுப்பி வைக்கவில்லை. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் சொல்லி விட்டுதான் மின்னணு எந்திரங்களையும் விவி பேட் எந்திரங்களையும் அனுப்பி வைத்தோம்.

    தேர்தல் கமி‌ஷனின் அனுமதியின் பேரில்தான் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் நடந்த தவறுக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்போது மறுவாக்குப் பதிவு நடத்துவதுதான் எங்களது முக்கிய பணியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் விவரத்தையும் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த 13 வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி கன்னப்பாளையம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் (பூத் நம்பர் 195) 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 1117 ஓட்டு உள்ளது.

    பூந்தமல்லி தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்ததால் இங்கு 19-ந் தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் 2 ஓட்டு போடுவார்கள். அப்போது நடு விரலில் “மை” வைக்கப்படும்.

    தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளர்கள் தர்மபுரி எம்.பி. தொகுதிக்கு ஒரு ஓட் டும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் பதிவு செய்ய வேண்டும்.

    தர்மபுரி எம்.பி. தொகுதியில் அடங்கிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண்.192 முதல் 195 வரை உள்ள 4 வாக்குச்சாடிகளிலும், டி.அய்யம்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண். 181 மற்றும் 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும், கேத்து ரெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்.183 மற்றும் 186 ஆகிய 2 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.

    இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு வாக்குச்சாவடிகளையும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து வாக்காளர்கள் 2 ஓட்டுகள் போட வேண்டும்.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்கு சாவடி எண். 248ல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

    இந்த ஓட்டு மையத்தில் தேர்தலுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மாதிரி ஓட்டு 50 சேர்ந்து பதிவாகி உள்ளது. இதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பண்ருட்டி திருவதிகை நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச் சாவடியில் கடந்த 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சின்னத்தின் பட்டன் இல்லை என்பதை வாக்காளர் ஒருவர் கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து 210-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கை அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 2-ம் கட்டமாக கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றபோது காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் வாக்குச்சாவடி எண் 10-ல் மாதிரி வாக்குப்பதிவுகளை வாக்குப்பதிவு அதிகாரி நீக்காமல் வாக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகர் வார்டு 10-ல் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  #LokSabhaElections2019 #Repoll


    தமிழகத்தில் மே 19ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மறுவாக்குப்பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த 13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Repoll 
    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths
    சென்னை:

    தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.



    வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

    தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths

    சென்னை கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPoll #TNCEO
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.



    இதையடுத்து  ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.

    தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LSPoll #TNCEO
    ×