search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election violations"

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன
    • பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    இந்தியாவில் உள்ள பலருக்கும் வாட்ஸ்-அப்-இல் மோடியின் கடிதம் என்ற குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தேர்தல் விதி மீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்துள்ளது

    இந்த வாட்ஸ்-அப் செய்திக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "வாட்ஸ்-அப் செய்தியில் கருத்து கேட்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே இருப்பதோ தேர்தல் பரப்புரை. வாட்ஸ்-அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால், எப்படி தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வாட்ஸ்-அப் அனுமதிக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வாட்ஸ்-அப் செய்தி இந்தியர்களை தாண்டி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரசார செய்தி அனுப்பப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

    சென்னை கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPoll #TNCEO
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.



    இதையடுத்து  ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.

    தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LSPoll #TNCEO
    ×