என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PMK candidate"
- தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
- பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
2024 பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!
அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
இதற்கு முன் 1999 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என கூறியுள்ளார்.
பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!
— Dr S RAMADOSS (@drramadoss) March 23, 2024
2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (…
தாம்பரம்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் பொதுமக்களிடம் பேசும்போது, நமது வேட்பாளர் வைத்திலிங்கம் நன்கு படித்தவர். பண்பாளர் டாக்டரான அவரால் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. பொதுமக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டு மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவருடன் ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.பி. வெங்கட்ராமன் அம்மன் வைரமுத்து சிவராஜ் எம்.எம்.பக்கிம் வானவம் எஸ். வரதராஜன், தனசேகர், ஆஷா பாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
அவருடன் கே.பழனி எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் என்.டி.சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்சுந்தர், மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். முன்னதாக வேட்பாளருக்கு ஒரத்தூர் என்.டி.சுந்தர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். #LoksabhaElections2019
வில்லிவாக்கம்:
மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முனைவர் சாம்பால் திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், சேப்பாக்கம், அண்ணாசாலை, புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் கையில் மாம்பழத்தை ஏந்தியபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் முனைவர் சாம்பாலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறுபாண்மை பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சாம்பால் கலந்து கொண்டார், அப்போது அவர், இஸ்லாமி யர்களின் உற்ற தோழனாக அவர்களின் பாதுகாவலனாக இருந்து பணி செய்ய என்னை மாம்பழம் சின்னத்தில் வாக் களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
அவருடன் தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.,உட்பட அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #PMK
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இன்று மீதம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக பா.ம.க. துணை தலைவர் அ.வைத்திலிங்கம், திண்டுக்கல் வேட்பாளராக பா.ம.க. துணை பொது செயலாளர் க.ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். #LSPolls #PMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்