என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.
    • சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது35). இவர் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே ஓட்டலில் அழகம்மாள் (22) என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.

    இருப்பினும் அவர்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று தனது மனைவி பாண்டியம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சோனைமுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது கணவர் மாயமானது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபா்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிகநிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021-ன்படி கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணி புரியும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

    மேற்படி சட்டதிருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளர்கள் மீது 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    மேலும் தமிழில் பெயர் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட 39 கடைகள், நிறுவன உரிமையாளர்கள் மீது 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் விதி 15-ன் படியும் மற்றும் ஒரு உண வக உரிமையாளர் மீது 1950-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு விடுதிகள் விதி 42-ன்படியும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமா மகேஸ்வரன், செல்வ ராஜ், பாத்திமா, துர்கா, பிச்சைக்கனி மற்றும் சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது33). இவரது மனைவி ராஜ லட்சுமி(25). விருதுநகர் மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவிக்கும், ராஜலட்சுமி யின் சகோதரர் சதீஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பான பிரச்சினையில் 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் மணிமாறன் குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கி பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு ராஜலட்சுமி கணவருடன் வந்தார். அங்கு மணிமாறன் சாமியாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் ராஜலட்சுமியை பார்த்ததும் ஆவேசமடைந்து திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராஜலட்சுமியின் சகோதரி முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த சுரேசுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனால் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    • திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைதானார்.
    • சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள குமிலாங்குலம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 19). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.மேலும் அந்த சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நரிகுடி போலீசாருக்கு தகவல்த ந்த அதன் அடிப்படையில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய உதயகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதில் அந்த சிறுமியை காதலித்து வந்ததும், திருமண ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து நரிகுடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தனர்.

    • முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
    • மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது64). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்தார். கடந்த சில வருடங்களாக மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள குப்பை தொட்டி ஒன்றில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் ராஜகோபாலின் மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். முத்துக்குமார் அங்கு வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிஉதவியை அமைச்சர் வழங்கினார்.
    • மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4-ந் தேதி அன்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் வீடுகள் சேதமடைந்து, மரங்கள், மின்கம்பங்களும், ஒரு சில இடங்களில் மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது. இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தினர்.

    மேலும் வருவாய்த் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சூறாவளி காற்றினால் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் சேதமடைந்த வீடுகள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதத்தின் அடிப்படையில் பகுதி சேதமடைந்த 82 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிதிஉதவி மற்றும் முழு சேதமடைந்த 1 குடும்பத்திற்கு ரூ.5,200 நிதியுதவி என 83 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது. இந்த உதவி தொகையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ) அனிதா, நகராட்சி ஆணை யாளர் அசோக்குமார், வட்டாட்சியர் அறிவழகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கீழடிக்கு நிகராக அடுத்தடுத்து கிடைக்கும் தொல் பொருட்களால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.
    • அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணா லான அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய காதணி கண்டெ டுக்க ப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று அகழ்வாராய்ச்சியின் போது 2 கிராமில் தங்க பட்டையும், 2.2 கிராமில் அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய கால மனிதர்கள் கலை நயமிக்க தங்க அணிகலன்க ளை அணிந்து நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்து ள்ளது தெரிய வந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெ டுக்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன் கண்டெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. வெம்பக்கோட்டை அகழாய்வில் கீழடி அகழாய்விற்கு நிகராக அடுத்தடுத்து அறிய வகையிலான தொல் பொ ருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே 27 சென்ட் இடத்தில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய நகர போக்குவரத்து காவல் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது.

    கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டார். அப்போது ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வு களுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-24-ம் ஆண்டிற்கான ஆண்டில் குரூப்-1, குரூப்-4, குரூப்-2 போன்ற பல்வேறு பணிக்காலியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டித்தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்க ளை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க https://forms.gle/QuWrLhx6tKZVP4C69 என்ற Google Form பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவராம கணேஷ்(வயது16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சிவராம கணேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்பு இரவில் வீடு திரும்பிய சிவராம கணேசின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதுகுறித்து பெற்றோர் கேட்டபோது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் நேற்று மாணவர் சிவராம கணேசுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை, அவரது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிவராம கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது மகன் இறந்ததால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த நிலையில் தனது மகன் இறந்திருப்பதால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சிவராம கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் ஊர் திருவிழாவுக்கு குரூப் டி-சர்ட் அடித்துள்ளனர். அதற்கு சிவராம கணேஷ் பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிவராம கணேஷ் தனது நண்பர்கள் 3 பேர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவரிடம் டி-சர்ட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தது தொடர்பாக நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சிவராம கணேசின் நண்பர்கள், அங்கு கிடந்த தென்னை மட்டையால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் காயமடைந்தாலேயே சிவராம கணேஷ் இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சிவராம கணேஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பிளஸ்-2 மாணவர்கள் ஆவர். மற்றொருவர் கூலி வேலை பார்த்து வரும் 18 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். 

    • சேதமான வீடுகள்-மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4-ந் தேதி பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் வீடுகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேத மடைந்தன. பல கிராமங்க ளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மழை யால் சேதமடைந்த பகுதி களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர், பொதுமக்களிடம் பாதிப்பு கள் குறித்து கேட்டறிந்து இயல்பு நிலைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    அருப்புக்கோட்டை பகுதியில் பெய்த கன மழையால் 53 வீடுகளின் ஓடுகள் சேத மடைந்துள்ள தாக தற்போது வரை கணக்கெடுக்கப் பட்டுள்ளது. மேலும் மரங்கள், மின்கம்பங் கள், ஒரு சில இடங்களில் மின்மாற்றிகள் விழுந்து சேதமடைந்துள்ளது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி சேதங்களை சீரமைக்க பணி கள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    தற்போது வரை சேத மடைந்த மின்கம்பங்களின் 90 சதவீத மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. விரை வில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் கனகராஜ், மாவட்ட தீய ணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன், அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் (பொ) அனிதா, நகராட்சி ஆணையாளர் அசோக் குமார், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சத்யா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி. எஸ்.இ. பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சத்யா வித்யாலயா பள்ளி குழுமத் தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி மருத்துவர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் அனுசுயா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    ×