என் மலர்
விருதுநகர்
- பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் அைற தரைமட்டமானது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.
80-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவை தயாரிக்கும் பணி நடந்தது.
அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவி அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. இதனைத்தொடர்ந்து அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 30 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன.
பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் அந்த அறை தரைமட்ட மானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தாள் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) சாத்தூர் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 27). இவர் வீட்டின் அருகே பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். மனைவி அங்காள ஈஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்காள ஈஸ்வரி சமையல் வேலைகளை முடித்துவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு அறையில் இருந்த கருப்பசாமி சமையலறைக்கு வந்து மனைவியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய கருப்பசாமி அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதில் அங்காள ஈஸ்வரியின் மனுக்கட்டு முழங்கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனால் கருப்பசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்றார் அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கருப்பசாமி வீட்டு நூல் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் அங்காள ஈஸ்வரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அங்காள ஈஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன்-மானா சாலை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 27-ந் தேதி சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஆனால் அதில் பணம் இல்லை. இதையடுத்து அந்த கும்பல் மது பாட்டில்களை சாக்கு மூட்டைகளில் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்த போலீசார் உடனே அவர்களை பிடிக்க முற்பட்டனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள் மதுபாட்டில் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து மது பாட்டில்களை மூட்டை கட்டும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள் பற்றி துப்புதுலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அதில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தைச் சேர்ந்த அரச பாண்டியன் மகன் குணசேகரன் (வயது 22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப் (19) என்பது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
- வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
- 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.
குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.
இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.
பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் அழகுராஜ். கட்டிட தொழிலாளி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டி ருந்தார்.
அப்போது அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் ஆர்.ஆர்.விலக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரோட்டோரமாக உள்ள மரத்தின் அடியில் படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த மர்ம நபர்கள் அழகுராஜின் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டனர்.
தூக்கத்தில் இருந்து விழித்த அழகுராஜ், தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ திருடி சென்றதை அறிந்த அவர் அது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் செந்திவிநாயக புரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமி யாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவ னத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-
ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல் கற்களில் ஊர்ப்பெயர் களை ஆங்கிலம், தமிழிலும், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் இத்தகைய மைல் கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.
விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், விருது பட்டி என தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், '௧' என்ற தமிழ் எண்ணிலும் மைல் கல்லில் குறித்துள்ள னர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப் பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளி வாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.
ஒருங்கிணைந்த ராமநா தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ல் நகராட்சி யான விருதுநகர், 1923-க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரை யில் இருந்து தூத்துக்குடி வரை ெரயில் பாதை போட்டபோது, 1876-ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுப்பட்டியைக் குறிக்கும் வி.பி.டி. தான்.
அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருது பட்டி ெரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக் கோட்டை யிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.
மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி என பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம்.
ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் 'விருதுகள்வெட்டி' என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலே யர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுப்பட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி யாதவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் அங்குள்ள கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அேத பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விசிலடித்து அங்கிருந்தவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை முத்துராஜா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த முத்துராஜா சிறிது நேரம் கழித்து மீண்டும் கலை நிகழ்ச்சி களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வெங்க டேஷ் மற்றும் அவரது உறவினர்க ளான ராகவன், ரமேஷ், முத்து, முத்து சரவணன், லட்சுமி உள்ளிட்ட 11 பேர் அவரை வழி மறித்து தகராறு செய்த னர். மேலும் அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த முத்துராஜாவின் தந்ைத முத்தையா, ராமகிருஷ்ணன், ஆதிமுகிலா ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து முத்துராஜா கூமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
- பாலித்தீன் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பேராலி ரோட்டில் தனியார் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட்டிங் மேலாளராக கலைசெல்வன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த நடராஜன் வாசுதேவன் என்ற வியாபாரி அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 351 மதிப்புக்கு நடராஜன் வாசுதேவன், கலைச்செல்வன் மூலமாக பாலித்தீன் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினார். இதற்கான தொகை செலுத்துமாறு கலை ச்செல்வன் அவரிடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் தொகையை முழுவதுமாக கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் விருதுநகருக்கு வந்த நடராஜன் வாசுதேவன், ரூ.16லட்சம் மதிப்புக்கு 2 காசோலைகளை கலைச்செல்வனிடம் கொடுத்தார். பின்னர் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.
இதையடுத்து கலைச்செல்வன் ஈரோட்டுக்கு சென்று, நடராஜன் வாசுதேவனிடம் தொகையை ரொக்கமாக தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணம் கேட்டு நேரில் வந்து சந்திக்க கூடாது என்று கூறி, நடராஜன் வாசுதேவன் கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலை யத்தில் கலைச்செ ல்வன் புகார் செய்தார். அதன்பேரில் நடரா ஜன் வாசுதேவன் மீது போலீசார் வழக்கு ப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
- நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார. இவரது மகன் கனகவேல் (18). இவர் உறவினர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
வாலிபர் பலி
ஏ.ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கனகவேலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் எம்.துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது50). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கடைகளுக்கு சென்று மிக்சர் பாக்கெட் விநியோகம் செய்வார். இந்த நிலையில் சைக்கிளில் சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (68). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.
- அருப்புக்கோட்டை அருகே விவசாயி-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
- சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளுமடத்தை சேர்ந்தவர் மணிமாறன் (44) விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பர்வதம். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கருப்பசாமி தனியாக வசித்து வந்தார். ஆனால் தனது சம்பளத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்து விடுவாராம். வீடு கட்டுவதற்காக இடம் கொடுத்தது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விறகு வெட்டுவதற்காக வாங்கிய அரிவாளுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து தங்களை தாக்குவதற்காக வருவதாக கருப்பசாமியின் மகன் தவறாக நினைத்து அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பர்வதம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே உள்ள அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் சாரைப்பாம்பு கிடந்தது.
- அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி திறக்கப்படு வதை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்த போது, குடிநீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமை யிலான வீரர்கள் ஆனைக் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.






