என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தி யாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டு நான்காம் ஆண்டு காலாண்டுக்கான ஆதர வாளர்களுக்கு ஊக்கத் தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.90 வீதம் 579 பால் உற்பத்தியாளர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த பால் உற்பத்தியாளர்கள் ராம் கணேஷ் (49,392), சிவக்குமார் (21,103), வெங்கடசாமி(11,846) ஆகியோருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் குமார், ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல் அலுவலர், இணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த 3 நபர்கள் போக மீதமுள்ள 576 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆர்-56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதன்முறையாக ஊக்கத்தொகை வழங்கியிருப்பது சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல உதவும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஈஞ்சார் மேற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 58). இவர் ஈஞ்சார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது 137 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    அங்கிருந்து புகையிலை பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி அருகேயுள்ள முருகையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் போலீசார் சோதனையிட்டபோது, 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகேயுள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது30). இவர் பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் வந்தார்.

    அவர் தான் பட்டா மாற்ற மனு செய்ததாகவும், அது இன்னும் தரப்படவில்லை என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஆவணங்களை பார்த்து பட்டா மாறுதல் சரி செய்து தருவதாக கணேஷ் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் கணேஷ் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பேக்கரி உரிமையாளரிடம் நகை-பணம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியை வளர்மதி (வயது51). இவர்க ளது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்ப கோவில் தெருவை சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் 17 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீடு கட்டுவதற்கு உதவி செய்யும்படி மகேந்தி ரனிடம் கேட்டார். அவர் பல தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்தார். மீண்டும் உதவி கேட்டபோது வளர்மதி 24 பவுன் நகை களை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேக்கரிக்கு சரக்கு வாங்க கொடுத்த பணத்திற்கு சரியாக கணக்கு தராமல் முத்து கணேஷ் இருந்துள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் எதனையும் அவர் செய்த தாகவும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து வளர்மதி அவரிடம் பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார். இந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்று விட்டார்.

    அதன் பின்பும் பலமுறை பணம்-நகையை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை. இதையடுத்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
    • புகார் இருந்தால் 04562 - 252705 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவை யான உரங்கள் யூரியா 3279 மெ.டன்னும், டி.ஏ.பி. 884 மெ.டன்னும், பொட்டாஷ் 264 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 1714 மெ.டன்னும், எஸ்எஸ்பி 263 மெ.டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தழைச்சத்து மட்டுமே உள்ள யூரியா உரத்தினை மட்டும் பயிர்க ளுக்கு பயன்படுத்தாமல், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து உரங்கள், நன்றாக மகசூல் பெறுவதற்கு தேவையான மணிச்சத்து உரங்கள், பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற தேவையான சாம்பல் சத்து உரங்களை மேலும், இந்த 3 சத்துக்களும் கலந்த காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் இம்மூன்று சத்துக்களும் பயிர்களுக்கு சமச்சீராக கிடைக்கும் வகையில் விவசாயிகள் உரமிட அறிவுறுத்தப்படு கிறது. அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விற்பனை விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுபாட்டு சட்டம் 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்தும், ரசீது வழங்கியும், சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்களை மட்டுமே உர விற்பனை யாளர்கள் வழங்க வேண்டும்.

    மானிய உரங்கள் விற்பனை செய்யும் போது சில உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதால் விவசாயி களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    விவசாயிகள் கேட்கும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் தினமும் குறிப்பிட வேண்டும்.

    பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் உரங்கள் வழங்கக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டத் திற்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் கள் கண்டறியப்படும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது டன் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

    உரங்கள் மற்றும் உர விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 04562 - 252705 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.
    • உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு மதுரை இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஜூலை 2-ந் தேதி வள்ளலாரின் முப்பெரும் விழா அருப்புக்கோட்டை சொக்கநாதர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ்இதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ். வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஜூலை 2-ந் தேதி நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள திருவேங்கடபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது50). இவரது 17 வயது மகன் 12ம் வகுப்பு செல்கிறார். அதற்காக சிறப்பு வகுப்பு களுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    சில நாட்களாக வகுப்புக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வகுப்புக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் சீனிவாசனும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. நண்பர்க ளிடம் விசாரித்தபோது வேறு நபருடன் ராஜ பாளையத்திற்கு சென்றதாக கூறினர். ஆனால் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகேயுள்ள தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகள் பிளஸ்-2 படிக்கிறார். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார். இந்த நிலையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தறுமாறு ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகேயுள்ள சிப்பிபாறையை சேர்ந்தவர் வெங்கடசாமி(63). இவர் அங்குள்ள தோட்டத்து பங்களா ஒன்றில் தங்கி யிருந்தார். இந்தநிலையில் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி முத்துலட்சுமி(38), நர்சிங் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மரிய லியோஜன். இவரது மனைவி ரமணி(27). இவர் கணவருக்கு தெரியா மல் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாக ெதரிகிறது. இது தெரியவந்ததும் கணவர் கண்டித்தார்.

    இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் அைற தரைமட்டமானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    80-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவை தயாரிக்கும் பணி நடந்தது.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவி அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. இதனைத்தொடர்ந்து அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 30 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன.

    பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் அந்த அறை தரைமட்ட மானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தாள் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) சாத்தூர் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 27). இவர் வீட்டின் அருகே பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். மனைவி அங்காள ஈஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்காள ஈஸ்வரி சமையல் வேலைகளை முடித்துவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு அறையில் இருந்த கருப்பசாமி சமையலறைக்கு வந்து மனைவியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய கருப்பசாமி அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதில் அங்காள ஈஸ்வரியின் மனுக்கட்டு முழங்கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனால் கருப்பசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்றார் அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கருப்பசாமி வீட்டு நூல் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் அங்காள ஈஸ்வரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அங்காள ஈஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன்-மானா சாலை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 27-ந் தேதி சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஆனால் அதில் பணம் இல்லை. இதையடுத்து அந்த கும்பல் மது பாட்டில்களை சாக்கு மூட்டைகளில் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்த போலீசார் உடனே அவர்களை பிடிக்க முற்பட்டனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள் மதுபாட்டில் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து மது பாட்டில்களை மூட்டை கட்டும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையடிக்க முயன்றவர்கள் பற்றி துப்புதுலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தைச் சேர்ந்த அரச பாண்டியன் மகன் குணசேகரன் (வயது 22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப் (19) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

    • வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.

    குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

    பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×