search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளலாரின் முப்பெரும் விழா-பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
    X

    வள்ளலாரின் முப்பெரும் விழா-பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.
    • உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு மதுரை இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஜூலை 2-ந் தேதி வள்ளலாரின் முப்பெரும் விழா அருப்புக்கோட்டை சொக்கநாதர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ்இதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ். வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஜூலை 2-ந் தேதி நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×