search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்காணிப்பு குழு கூட்டம்
    X

    கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    கண்காணிப்பு குழு கூட்டம்

    • வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.

    குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×