முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்மமான முறையில் இறந்தார். மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
முதியவர் மர்ம சாவு
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது64). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்தார். கடந்த சில வருடங்களாக மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள குப்பை தொட்டி ஒன்றில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் ராஜகோபாலின் மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். முத்துக்குமார் அங்கு வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com