என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கிடந்த சாரைப்பாம்பு
- விருதுநகர் அருகே உள்ள அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் சாரைப்பாம்பு கிடந்தது.
- அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி திறக்கப்படு வதை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்த போது, குடிநீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமை யிலான வீரர்கள் ஆனைக் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்