என் மலர்
திருவள்ளூர்
- பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி சிறையில் கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கஞ்சா மற்றும் செல்போன் சிறைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஷ்வத்தாமன் உள்பட 23 பேர் மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 38 கைதிகள் புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறைத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதையொட்டி பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
- பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.
- பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- விநாடிக்கு 16,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.
இதன் முழுகொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரம் படி நீர்இருப்பு 34.97 அடியாகவும் கொள்ளவு 3159 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என்பதால் அணையின் வெள்ள நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் மாலை 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து 12760 மில்லியன் கன அடி வந்து கொண்டிருப்பதால் 12000 கன அடி உபரி வெளியேற்றப்படுகின்றது.
இந்த நிலையில் பூண்டி ஏரியில் நீர்வரத்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் நீர் திறப்பும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 5,900 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், 5000 கன அடி நீர் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பி உள்ளது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு பலத்த மழை கொட்டியபோது உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் அம்மப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் அம்மப்பள்ளி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நகரி, திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு வருகிறது.
அம்மப்பள்ளி அணை திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருத்தணி அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, சுரக்காப்பேட்டை பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.
இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்த்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது.
கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
- ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சாணாபுத்தூர் செல்லும் அரசு பஸ்(எண் டி62) இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வீரய்யன் ஓட்டினார். காலையில் மழை பெய்து கொண்டு இருந்ததால் 2 பயணிகள் மட்டும் பஸ்சில் இருந்தனர்.
பொன்னேரி அடுத்த காட்டாவூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
இதில் ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. டிரைவர், கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
- பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
- நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி நிலவரப்படி பூண்டி அணைக்கான நீர்வரத்து 1,290 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பிற்பகல் 1.30-க்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்திறப்பு படிப்படியாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குப்பம், மணலி, இடையான்சாவடி, எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.
- மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.
- சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு, ராஜேஸ்வரி நகர், பிரனாவநந்தா பள்ளி தெரு மற்றும் நாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கேசவபுரம் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஃபெஞ்ஜல் புயல் காரணமாக மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜாரில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்த முசாமின் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி தாயுமாண் செட்டி தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் பெருலால் (28) என்பவர் கடையில் பதுக்கி வைத்து அங்கிருந்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முசாமின் மூலம் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து கடையில் பதுக்கி வைத்த 65 கிலோ குட்கா, விற்பனை செய்த 65 கிலோ குட்கா என மொத்தம் 130 கிலோவை திருப்பாலைவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






