என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
    • ரெயிலில் 4 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களான குமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

    இந்த வழித்தடத்தில் சாதாராண நாட்களை தவிர தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியமான பண்டிகை காலங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு அடுத்த நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.

    இந்நிலையில் வார இறுதி நாட்களில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலை இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி இன்று மாலை நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது எனவும், இது ஒருவழி ரெயில் எனவும் தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரெயில் (06040) இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு மதுரை சென்றடைகிறது. பின்பு மதுரையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு நாளை (திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்த ரெயிலில் 4 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பயணிகள், வியாபாரிகள் பெருமளவில் பயன் அடைவார்கள் என்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஏட்டு ஒருவர் சக போலீஸ்காரர்களை தனது பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்தது.
    • மனமுடைந்த இரண்டாம் நிலை காவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர ஆயுதப்படை பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி பின் வாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

    இங்கு மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் சக போலீஸ்காரர்களை தனது பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்தது.

    இந்நிலையில் சமீபத்தில் அந்த போலீஸ் ஏட்டு, ஆயுதப்படையில் பணியாற்றும் 2-ம் நிலை காவலர் ஒருவரை அழைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரை தாக்கியதில் அந்த காவலர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரியப்படுத்தாமல் அங்கிருந்து சக காவலர்கள் உதவியுடன் போலீஸ் ஏட்டு அந்த காவலரின் மயக்கத்தை தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த இரண்டாம் நிலை காவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன
    • பங்குனி உத்திர திருவிழாவின் 10-ம் திருநாள் அன்று இரவு பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக்காரணமானதுமான டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    பங்குனி உத்திரம்

    அதன் ஒரு நிகழ்வாக பங்குனி மாதத்தையொட்டி இன்று பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதனையொட்டி சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. இதற்காக காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் கொடிமரத்துக்கு மாபொடி, மஞ்சள், வாசனை பொடி, பால், தயிா், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    செங்கோல் விழா

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளான்று ஆலயம் உருவான வரலாறு திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் பணியாளர்கள், பக்தா்கள் செய்து வருகின்றனர்.

    • செல்வக்குமார் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
    • செல்வக்குமார் கடன் வாங்கியதால் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 47). இவர் நெல்லை-அம்பை சாலையில் காட்டு புதுத்தெருவில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    தற்கொலை

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சுப்பு லெட்சுமியை அழைத்துக்கொண்டு சென்று அவரது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு மறுநாள் காலை செல்வக்குமார் வீடு திரும்பி உள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடன் தொல்லை?

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் செல்வக்குமார் லோன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு கடன் வாங்கியதால் சிரமம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கடன் பிரச்சினை யில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 23-ந்தேதி காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம்தொடங்கப்பட்டது.
    • திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறியிருந்தனர்.

    பாட்டிலுக்கு ஒரு ரூபாய்

    இதற்கு நிரந்தர தீர்வு காணுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் முறையாக டவுன் மண்டலத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டமானது டவுன் சுகாதார அலுவலகத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தொடங்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டமானது தமிழகத்தில் நெல்லை மாநகராட்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 3 நாட்களுக்குள் சுமார் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டம் எனவும், மக்களின் நிலை உயரவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு ஏற்ப நெல்லையில் இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரத்திற்குள் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை-சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள ஷிம்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நெஞ்சக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் ஷிபா மருத்துவமனையின் நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் நெஞ்சக நோய் கண்டறியும் பி.எப்.டி. பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹாஜி முகம்மது ஷாபி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கே.டி.சி. நகர், சாந்திநகர், திம்மராஜபுரம், கீழப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • அக்சா வின்சி பெனிட்டாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
    • கடந்த 23-ந் தேதி மாலை காரில் வெளியே சென்ற அக்சா வின்சி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    நெல்லை:

    தச்சநல்லூர் சுகர் மில் காலனியை சேர்ந்தவர் மைக்கேல் பிரபாகர். இவரது மகள் அக்சா வின்சி பெனிட்டா (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவரை பிரிந்து தனது தந்தை மைக்கேல் பிரபாகர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி மாலை வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெனிட் டாவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் இளங்கோ அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது 72). இவர் களக்காடு புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக தனது மோட்டார் சைக்கி ளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது நாங்குநேரி-களக்காடு சாலையில் அமைந்துள்ள கிறிஸ்டோபர் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், பெரும்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரது மனைவி மேரி மற்றும் மகன் பால் இலக்கிய செல்வன், மகள் ஜென்ஸி பாக்கியரதி ஆகியோர் பால் இளங்கோவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்றும் கூறினார்கள்.

    விபத்து குறித்த தகவல்களை போலீஸ் சரியாக விசாரிக்காமலும், உறவினர்களிடம் சரியான பதில் சொல்லா மலும், உதாசின படுத்தியதாக எம்.எல்.ஏ. விடம் கூறினர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியாகவும், குடும்ப தலைவரை இழந்த குடும்பத் திற்கும், உறவினர்களிடமும் விபத்து குறித்த அறிக்கையை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்கள்.

    உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகை துரை, ராமஜெயம், நிர்வாகிகள் ஜெயசீலன், ராமநாதன், சுந்தர், வின்சென்ட், குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது.
    • தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை :

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி உள்ளோம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது. லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி தோள் கொடுத்து செயல்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கே வழங்குவதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது. அப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்.அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    நெல்லை:

    குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சவுராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை கடந்த 17- ந்தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

    சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா

    இதன் தொடர்ச்சியாக பாளை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலை மையில் நடைபெற்றது.

    இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சங்கமம் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். இங்கு தமிழ் மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்த வர்களும் அறிந்து கொள்ள வேண்டும்்.

    தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    பாதுகாப்பான மாநிலம்

    தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்ப திலும் சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் குஜராத் மாநிலம் மகேஷன் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணை வேந்தர் க்ரிஷ்பாய்பீமணி, மற்றும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்து கொண்டனர்.

    • கோமதி நாயகம் என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது42), வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான 246 பவுன் தங்க நகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து கே.டி.சி. நகரை சேர்ந்த கோமதி நாயகம் (41) என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார். இதனால் கோமதி நாயகம் நகைகளை மீட்டு ரமேஷ்குமாரிடம் கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    பலமுறை ரமேஷ்குமார் தன்னிடம் நகைகளை தருமாறும், அதற்குரிய பணத்தை தருவதாக கூறியும் அவர் கொடுக்கவில்லை. மேலும் நகைகளை கொடுக்க மறுத்த கோமதி நாயகம் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையாவிடம் விவரம் கூறினார்.

    பின்னர் சகோதரர்கள் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தர வின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் அவரது சகோதரர் கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணை யாவை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். 

    • கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
    • தி.மு.க.வில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹெலன்டேவிட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுதல், இதற்காக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலாசத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமான், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், பகுதி செயலளார்கள் கோபி, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், ரவீந்தர், நிர்வாகிகள் அய்யாச்சாமி பாண்டியன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×