search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- நெல்லை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- நெல்லை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

    • கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
    • தி.மு.க.வில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹெலன்டேவிட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுதல், இதற்காக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலாசத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமான், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், பகுதி செயலளார்கள் கோபி, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், ரவீந்தர், நிர்வாகிகள் அய்யாச்சாமி பாண்டியன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×