search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே பலியான சபை ஊழியர் குடும்பத்தினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
    X

    பலியான சபை ஊழியர் குடும்பத்தினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.

    நாங்குநேரி அருகே பலியான சபை ஊழியர் குடும்பத்தினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்

    • கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் இளங்கோ அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது 72). இவர் களக்காடு புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக தனது மோட்டார் சைக்கி ளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது நாங்குநேரி-களக்காடு சாலையில் அமைந்துள்ள கிறிஸ்டோபர் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், பெரும்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரது மனைவி மேரி மற்றும் மகன் பால் இலக்கிய செல்வன், மகள் ஜென்ஸி பாக்கியரதி ஆகியோர் பால் இளங்கோவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்றும் கூறினார்கள்.

    விபத்து குறித்த தகவல்களை போலீஸ் சரியாக விசாரிக்காமலும், உறவினர்களிடம் சரியான பதில் சொல்லா மலும், உதாசின படுத்தியதாக எம்.எல்.ஏ. விடம் கூறினர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியாகவும், குடும்ப தலைவரை இழந்த குடும்பத் திற்கும், உறவினர்களிடமும் விபத்து குறித்த அறிக்கையை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்கள்.

    உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகை துரை, ராமஜெயம், நிர்வாகிகள் ஜெயசீலன், ராமநாதன், சுந்தர், வின்சென்ட், குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×