என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
    • மின்கம்பங்களுக்கும் இடையே தூரத்தை குறைப்பதற்காக 28 மின் கம்பங்கள் நடப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற் குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் மின் விபத்துகளில் இருந்து வனவிலங்குகளை பாது காக்கும் பொருட்டு, வனத்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து மின் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக தலையணை வனப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் தாழ்வழுத்த மின்பாதையில் பூமிக்கும் மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.

    இது போல 2 மின்கம்பங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைப்பதற்கும் மொத்தம் 28 மின் கம்பங்கள் நடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 

    • எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
    • பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

     நெல்லை:

    நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் மாவட்ட அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியாகினர். இவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதையொட்டி, மும்பையில் பலியான 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அமை க்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தமிழக வீரர்கள் 33 போ் உட்பட வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் அனைத்து தீயணைப்பு வீரர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா உட்பட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.-அ.தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவை தலைவர் வி.கே.முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை மேயர் ராஜு, பொருளாளர் வண்ணை சேகர், எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி மணி, சஞ்சய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா ளர் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலா யுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், டவுன் கூட்டுறவு வங்கித் தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, சீனி முகம்மது சேட், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர் சொக்க லிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, அய்ப்பன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.-ம.தி.மு.க.

    தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் அவைத்தலைவர் மாடசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன், துணைச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் கலைவாணர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செய லாளர் சீயோன் தங்க ராஜ் தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க.-ச.ம.க.

    அ.ம.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன்,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் அழகேசன் தலைமை யிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலை மையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் முத்தையா ராமர் தலைமையிலும், நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலை மையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சோதனையில் அனுமதி இல்லாமல் செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டியன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டின், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தப்பி ஓடிய டிரைவர் பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பண்டிகை நாட்கள்

    இங்கு முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்க ளில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்க இன்று வியாபாரி களும், பொதுமக்களும் சந்திப்பு பூ மார்க்கெட்டில் திரண்டனர். இதனால் விலையும் அதிகரித்திருந்தது. நேற்று ரூ. 700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ. 300 உயர்ந்து ரூ. 1,000-க்கு விற்கப்பட்டது.

    ரோஜா

    இதேப்போல் நேற்று ரூ. 500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ. 200 உயர்ந்து ரூ. 700-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ. 300-க்கும், சம்பங்கி ரூ. 200-க்கும், ரோஜா பூ 1 கட்டு ரூ. 150-க்கும், கேந்திப்பூ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.

    தற்போது பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக பூக்கள் வந்துள்ளது. எனவே இன்று பூக்களின் விலை சிறிது அளவே உயர்ந்துள்ளது. எனினும் தேவை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

    • களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.
    • நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ் புத்தாண்டை யொட்டி நாளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லை யப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடை பெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாநகர பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    • நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.
    • நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணலை ஆரோ லேப் பயிற்சி மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு ஏற்பாடு செய்தது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஆரோ லேப் பிரிவு மேற்பார்வையாளர் தேவி மற்றும் லைன் இன்சார்ஜ் வனஜா ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

    பின்னர் ஆரோ லேப் அனைத்து இறுதி ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கும் எழுத்து தேர்வை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருப்பமுள்ள மாணவிகள் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    பயிற்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு டீன் ரேவதி நன்றி கூறினார். வேலைவாய்ப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மிருணா தேவி, பொருளாதார துறை உதவி பேராசிரியை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுடர்வேணி என்ற சுபா, எஸ்.அனு நித்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரநாதன் மகள் அனு தர்ஷினி (வயது 17).
    • சமீப காலமாக அனு தர்ஷினி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவரது மனைவி கலா. இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதில் 3-வது மகள் அனு தர்ஷினி(வயது 17).அனுதர்ஷினி ஏர்வாடியில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்திருந்த அனு தர்ஷினி இரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டில் இருந்து சேலையை எடுத்துக் கொண்டு சமைய லறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை கலா எழுந்து பார்த்தபோது அனு தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
    • வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்-

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக "தொழில் முனைவோரின் எதிர் கால திட்டம்-2047" என்ற தலைப்பில் தேசிய அளவி லான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் வி.பி.ராம நாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தி னராக வணிகவியல் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்ம ரஜினி சிறப்புரை யாற்றினார். 2-ம் அமர்வில் கேரளா, கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம் தொடர்பான கருத்து க்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் கலந்து ரையாடல் நடை பெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேரா சிரியர்கள் செய்திருந்தா ர்கள். கருத்தரங்கில் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஒருங் கிணைப் பாளர் வேல் பாண்டி நன்றி கூறினார். 

    • அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்திய புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.
    • அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை நடத்துகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ. கடந்த 10-ந் தேதி அம்பை தாசில்தார் அலுவல கத்தில் தமது விசா ரணையை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தமது அடுத்த கட்ட விசா ரணையை மேற் கொள்ள உள்ளார்.

    அம்பை காவல் உட்கோட்டத்தில் காவல் துறை யால் விசாரணை கைதிகளை துன்புறுத்திய தாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விசா ரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்பு பவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்கு மூலங்களை அளிக்க விரும்பு வோர் 17, 18-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாசில்தார் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

    ஏற்கனவே சேரன்மகா தேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவரிடம் புகார், வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை.

    ஆனால் உயர்மட்ட விசா ரணை அலுவலர் முன்னிலை யில் மீண்டும் ஒருமுறை வாக்கு மூலம் அளிக்க விரும்பி னாலோ, புகார், கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக் கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் விசா ரணை அலுவலரிடம் நேரடி யாக புகார் அளிக்க இயலாத வர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 918248887233 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில போலீசாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
    • அம்பை சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திலும் விசாரணைக்கு சென்ற ஒருவரது பற்கள் பிடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இதுதொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார். அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து போலீசார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    மேலும் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில போலீசாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திலும் விசாரணைக்கு சென்ற ஒருவரது பற்கள் பிடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையே இந்த புகார் தொடர்பாக போலீசார் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையை வைத்து அவர் மீதும் சித்ரவதை செய்யப்பட்டு பற்கள் பிடுங்கப்பட்டதாக ஆதாரமின்றி புகார் தெரிவிக்கின்றனர் என்றனர்.

    ×