என் மலர்
நீங்கள் தேடியது "Cosmetology training"
- சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
திருப்பூர் :
சென்னையில் உள்ள ஒரு அழகுக்கலை பயிற்சி மையம் மூலம், அழகு நிலையங்களில் பணிபுரிதல் மற்றும் சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பு படித்த, 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் அழகுக் கலை மையத்தில் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தனியார் அழகு கலை நிலையங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்வதற்கு, தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர், www/tahdco.com என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & hair Dressing) பயிற்சி தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
இதில் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- “யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
- பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும்.
களக்காடு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், களக்காடு சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில் முதல் கட்டமாக 15 பெண்களுக்கு தையல், அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும், அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும், இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம்.
கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும். பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும்.
இந்த தொழில் மேன்மையடைந்தால் வருங்காலத்தில் களக்காடு தையல், அழகு கலையின் மையமாக மாறும். பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு தையல் ஆர்டர்கள் குவியும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்" என்றார்.
விழாவில் களக்காடு வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனசரகர் பிரபாகரன், வனவர்கள் களக்காடு சிவக்குமார், திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், கிராம வனக்குழு தலைவர்கள் வடகரை பாலன், கலுங்கடி ஆனந்தராஜ், ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
- 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
அவினாசி :
அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தையல்,அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகு கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்கல் போன்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தால் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலம் 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் திறன் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மட்டும் முகாமிற்கு வரும்பொழுது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவை எடுத்து வர வேண்டும். இந்த தகவலை தமிழ் நாடு ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை பல்வேறு அரசு தொழில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கவுசல்விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது.