search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officer inform"

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.
    • மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மின்வேலி

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத் துவதை தவிர்க்கவும், தங்கள் நிலங்களில் பிறர் அத்துமீறி நுழைவதை தடுக்கும் நோக்கத்தில் நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.

    இதனால் விலங்குகளும், மனிதர்களும் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மின்வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 படி தண்டணைக்குரிய குற்றமாகும். எனவே அவ்வாறு மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படு வதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின் இணைப்பு துண்டிப்பு

    கடந்த 3-ந் தேதி விரகேரளம்புதூர் அருகே உள்ள கீலக்கலங்கல் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒரு விவசாயி பரிதாபமான உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் மின் வேலி அமைத்தவர் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் கடந்த ஆண்டு மாயமான்குறிச்சி, ராசிகபேரி, வண்ணந்துறை, தெற்குப்பட்டி, சித்தார் சத்திரம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளால் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரி ழந்துள்ளனர்.

    இந்த வழக்குகளிலும் மின் இணைப்பு துண்டிக்க பட்டதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பதை நில உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • “யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
    • பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும்.

    களக்காடு:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், களக்காடு சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில் முதல் கட்டமாக 15 பெண்களுக்கு தையல், அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.

    பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும், அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும், இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம்.

    கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும். பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும்.

    இந்த தொழில் மேன்மையடைந்தால் வருங்காலத்தில் களக்காடு தையல், அழகு கலையின் மையமாக மாறும். பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு தையல் ஆர்டர்கள் குவியும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்" என்றார்.

    விழாவில் களக்காடு வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனசரகர் பிரபாகரன், வனவர்கள் களக்காடு சிவக்குமார், திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், கிராம வனக்குழு தலைவர்கள் வடகரை பாலன், கலுங்கடி ஆனந்தராஜ், ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி பகுதி விவசாயிகள் 15-ந்தேதி வரை உளுந்து- கடலைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று அதிகாரி தகவல் கூறியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் பொ.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும்,பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு, எள்,நிலக்கடலை,கோடை நெல்,தரிசுபருத்தி பயிரை காப்பீடு செய்ய ஒவ்வொரு பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.கடன்பெறா விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள்,வங்கிகள்,மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு பிரிமியம் பயிர் தொகையாக உளுந்துபயிருக்கு ரு.214.50,பாசிப்பயிருக்கு ரூ.214.50,நிலக்கடலைக்கு ரூ.357.00,எள் பயிருக்கு ரூ.180.00 இவற்றிக்கு பிரிமியம் தொகை செலுத்த ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும்.

    கோடை நெல் சாகுபடிக்கு ரூ.442.50.கடைசி தேதி பிப்ரவரி 15 மற்றும் பருத்திக்கு ரு.354 கடைசிதேதி மார்ச் 15-ந்தேதி ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்,கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது உதவி வேளாண்மை அலுவலரால் வழங்கப்படும் சாகுபடி சான்று, வங்கி கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பயிர் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×