என் மலர்
திருநெல்வேலி
- கூலித் தொழிலாளியான நம்பிராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
- இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டும் கருவி பழுதடை ந்துள்ளதால், உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.
இதற்கு இறந்தவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இறந்தவரின் உடலுடன் அரசு மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக கொடுத்தனர். இதனை அடுத்து நம்பிராஜன் உடல் அந்த பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாளை சீனிவாசநகர் மேம்பாலம் அருகே மாரி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த மாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள கீழ வெள்ளமடம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 40). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ந்தேதி பாளை சீனிவாசநகர் மேம்பா லம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து, டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்தியோதயா ரெயிலை மறித்தனர்
இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர்.
அப்போது 3-வது நடைமேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
120 பேர் கைது
இந்த போராட்டத்தில் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலை வர் வக்கீல் காமராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்ககுமார், உதயகுமார், கவிபாண்டியன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ள பாண்டியன், அழகை கிருஷ்ணன்,
சிவன் பெருமாள், மாவட்ட செயலாளர் கே.எஸ். மணி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க செயலாளர் தனசிங் பாண்டியன், சிவாஜி பாலசந்தர், மண்டல தலைவர்கள் பரணி இசக்கி, அய்யப்பன், கெங்கராஜ், முகமது அனஸ் ராஜா, ராஜேந்திரன் மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்ட த்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலைய சந்திப்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும் ,திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் வழங்கப்பட்டது.
- ரமேஷ் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரமேசை சரமாரியாக வெட்டினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நெல்லை ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவர் தாழையூத்து அருகே சங்கர் நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். நேற்று நள்ளிரவு ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பினார்.
அரிவாள் வெட்டு
ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூருக்கு ஊருடையார்புரம் சாலையில் அவர் சென்றபோது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல் வழி மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேசை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமேஷ் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் ராதாபுரம் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி ரமேஷ் சாமி கும்பிட சென்றுள்ளார்.
வழக்குப்பதிவு
அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராதாபுரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆத்திரத்தில் எதிர்தரப்பினை சேர்ந்த 2 பேர் ரமேசை வெட்டிக்கொலை செய்ய முயன்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் 11 மாநகராட்சியில் பெண்கள் மேயர்களாக உள்ளனர்.
- ராதாபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.
வள்ளியூர்:
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றியம் ராதாபுரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல், பேரூர் செயலாளர்கள் ஜான்கென்னடி, சேதுராம லிங்கம், தமிழ் வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் அனிதாபிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி வரவேற்று பேசினார். தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாட நூல் கழகதலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
அவர் பேசியதாவது:- பெண்ணுரிமை காக்கின்ற முதல்- அமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார். பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்து கிறார்.
பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவிகிதம் வழங்கி உள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று 11 மாநகராட்சியில் மேயர்களாக பெண்கள் உள்ளனர்.
மேலும் நமது முதல்- அமைச்சர் ராதாபுரம் தொகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்ட ரங்கம், ரூ.3 கோடியில் ராதா புரத்தில் மினி ஸ்டேடியம், ரூ.605 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், ராதா புரத்தில் அனைத்து பள்ளி களுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.
இவற்றை எல்லாம் ராதா புரம் சட்டப் பேரவை உறுப்பி னரும், சபாநாய கருமான மு.அப்பாவு தனது முயற்சி யால் பெற்றுத் தந்து கொண்டி ருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்க பாண்டியன், போர்வெல்கணேசன், ஆரோக்கிய எட்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், எட்வின் வளனரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், சாலமோன் டேவிட், இளைஞரணி ஜாண் ரபீந்தர், திசையன்விளை பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், நடேஷ் அரவிந்த், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பரிமளம், நடராஜன், மெர்லின், இசக்கிபாபு, அனிதா ஸ்டெல்லா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், அந்தோணி அருள், முருகேசன், கந்தசாமி, மணி கண்டன், வைகுண்டம் பொன் இசக்கி, கு.முருகன், சாகய பெபின்ராஜ், பஞ்சவர்ணம் ஜெயக்குமார், ஆ.முருகன், வி.எஸ்.முருகன், சூசைரத்தினம், சாந்தா மகேஷ்வரன், ஜேய்கர், ராதிகா சரவணகுமார் மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடு களை ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி செய்திருத்தார்.
அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிப்பு
பணகுடியில் தி.மு.க. சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிரகாம்பெல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பணகுடி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் திவாகரன், மணி, அலீம், ஆனந்தி, ஆசா, ஹரிதாஸ், முத்துராமன், வெள்ளைச்சாமி, மாணிக்கம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கு பெற்ற வர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
- முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர். அவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் ரெயிலில் வள்ளியூரில் ஏறிய காங்கிரஸ் தொண்டர் ஜெயபாண்டி என்பவர் ரெயில், நாங்குநேரி அருகே வந்தபோது அவசரகால சங்கிலியை இழுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
- வசந்த் உள்பட 9 பேரும் சேர்ந்து பெருமாள்சாமியை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- 6 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் பெருமாள்சாமி (வயது25).
இவர் நேற்று தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சிவா, நவீன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குடில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடில் தெருவை சேர்ந்த வசந்த் (25), கிஷோர் (24), அரவிந்த் (23), மதன், தீபக், இளையராஜா, சுர்ஜித், ஆனந்த் உள்பட 9 பேர் பெருமாள்சாமியை வழிமறித்து எங்கள் ஊர் வழியாக வேகமாக செல்வதா? எனக் கேட்டுள்ளனர்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வசந்த் உள்பட 9 பேரும் சேர்ந்து பெருமாள்சாமியை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விசாரணை நடத்துவதற்காக குடில் தெருவிற்கு ஜீப்பில் சென்றனர். இதைப்பார்த்த அர்ஜுணன் மற்றும் குடில்தெருவை சேர்ந்த பெண்கள் போலீஸ் ஜீப்பை வழி மறித்தனர். அத்துடன் ஊருக்குள் செல்லக் கூடாது என்று ஜீப் முன்பு அமர்ந்து வழிமறித்தனர்.
மேலும் அர்ஜூணன், போலீசாரை பார்த்து ஊரை விட்டு வெளியே போங்கள், இல்லையெனில் ஒருவரும் உயிருடன் செல்ல முடியாது என்று கல்லை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அளித்த புகாரின் பேரில், அர்ஜூணன் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விசாரணைக்கு சென்ற போலீசாரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது.
- கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும்
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 10-ந் தேதி வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 22) என்பவரும், 17 வயதான அவரது தம்பியும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களது பற்கள் உடைக்கப்பட்டதாக அவர்களின் தாயார் புகார் கூறியிருந்தார்.
நேற்று அருண்குமார் பல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவரது தாயார் ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான உரிய விளக்கம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்று அவரது தாயார் புகார் கூறி உள்ளார்.
அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் 1-ன் படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 6-ந் தேதி கேட்ட நிலையில் 48 மணி நேரத்தை கடந்தும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரி எனது மகனின் மருத்துவ அறிக்கை குறித்து பதில் தர மறுக்கிறார் என அவர் புகார் கூறி உள்ளார்.
அந்த மனுவில் கடந்த 10 -ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் முன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை ராஜேஸ்வரி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+2
- புத்தாண்டு பிறப்பையொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
- சோபகிருது வருடப்பிறப்பையொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை:
தமிழ் புத்தாண்டை யொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை யொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபா டுகள் தொடங்கின. தொ டர்ந்து ஏராளமான பக் தர்கள் குடும்பத்தி னருடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
இன்று மாலையில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் சோமஸ்கந்தர் மண்ட பத்திற்கு எழுந்த ருளிய பின்னர் சோபகிருது வருடப்பிறப்பை யொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவில் ஜோதிடர் பங்கேற்று கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து பஞ்சா ங்கம் வாசிக்கப்படு கிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சூரிய ஒளி
ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும், விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்ட நெல்லை சந்திப்பு மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்தது. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நாயக்க, பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.
அத்தகைய பெருமை மிகுந்த இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக மும், மகா கும்பாபி ஷேகமும் நடைபெற்றது.
பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சித்திரை முதல் நாள் தொடங்கி 3 நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இத்தகைய அரிய நிகழ்வு சித்திரை 1-ம் நாளான இன்று நடைபெற்றது. சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் பரவசம் அடைந்து தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகளும் அதனைத் தொடர்ந்து மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
கோபூஜை
பாளை தெற்கு பஜார் ராஜகோபாலசுவாமி கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பாளை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு கோ பூஜை நடைபெற்றது.
நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேல வாசல் சுப்பிரமணியசாமி கோவில், தெற்கு பஜாரில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து தரிசனம் செய்து திரும்பினர். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் பரிவார சுவாமி களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மதியம் உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுப்பையா ரமேஷ் சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்தார்.
- சமாதானபுரம் அருகே சுப்பையா ரமேஷ் இறந்து கிடந்தார்
நெல்லை:
பாளை கிருஷ்ணாபுரம் செல்லதுரை நகரை சேர்ந்தவர் சுப்பையா ரமேஷ் (வயது36). பட்டதாரியான இவர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்தார். மேலும் வியாபாரமும் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சமாதானபுரம் அருகே அவர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதி வியாபாரிகள் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று சுப்பையா ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தியதில் சுப்பையா ரமேசுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அந்த மன வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டணம் செலுத்தி மண் எடுக்கும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
- அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதில் பேசும்போது, செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் விவசாயிகள், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களால், அதை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தபடி, அதாவது, அரசுக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு, அரசாங்கத்திடம் உரிய கட்டணம் செலுத்தி, அந்த வண்டல் மண்ணை எடுக்கும் முறைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழில் செய்வோர், செங்கள் சூளை நடத்துவோர் மற்றும் விவசாயிகள் பயன் அடைவார்கள், என்றார்.
அமைச்சர் பதில்
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-
செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 வகைகள்
அரசு விதிகளின்படி மூன்று வகையில், அவர்கள் அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். முதல் விதியின்படி, மணல் எடுக்கக்கூடிய பட்டா நிலத்தில், அங்கே மணல் குவாரி செயல்படவில்லை என்கிற சான்றிதழ் பெற்று, ஒரு வருட காலத்துக்கு அனுமதி பெற்று மணல் எடுக்கலாம்.
இரண்டாவது, உரிய இடத்தில் மணல் எடுக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மணல் எடுக்கக்கூடிய இடத்தில் குவாரி செயல்படவில்லை என்கிற தடையில்லாச் சான்று பெற வேண்டும். கலெக்டர் அனுமதி தந்த பிறகு, ஒன்றரை மீட்டர் ஆழம் வரை அங்கே மணல் எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவது, ஏரி, குளம் ஆகியவற்றில் மணல் எடுக்கக்கூடிய அனுமதியை மாவட்ட கலெக்டரே வழங்குவார். அந்த அனுமதியைப் பெற உரிமைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள், விவசாயிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், அவர்கள் வண்டல் மண் எடுக்க எளிமையான விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.






