search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினர்களை படத்தில் காணலாம்.

    நாங்குநேரி அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்

    • கூலித் தொழிலாளியான நம்பிராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டும் கருவி பழுதடை ந்துள்ளதால், உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதற்கு இறந்தவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இறந்தவரின் உடலுடன் அரசு மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக கொடுத்தனர். இதனை அடுத்து நம்பிராஜன் உடல் அந்த பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×