search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாங்குநேரியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திய காங்கிரஸ் நிர்வாகி உள்பட 183 பேர் கைது
    X

    நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    நாங்குநேரியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திய காங்கிரஸ் நிர்வாகி உள்பட 183 பேர் கைது

    • நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர். அவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் ரெயிலில் வள்ளியூரில் ஏறிய காங்கிரஸ் தொண்டர் ஜெயபாண்டி என்பவர் ரெயில், நாங்குநேரி அருகே வந்தபோது அவசரகால சங்கிலியை இழுத்து நிறுத்தினார்.

    இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×