என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை
- சுப்பையா ரமேஷ் சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்தார்.
- சமாதானபுரம் அருகே சுப்பையா ரமேஷ் இறந்து கிடந்தார்
நெல்லை:
பாளை கிருஷ்ணாபுரம் செல்லதுரை நகரை சேர்ந்தவர் சுப்பையா ரமேஷ் (வயது36). பட்டதாரியான இவர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்தார். மேலும் வியாபாரமும் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சமாதானபுரம் அருகே அவர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதி வியாபாரிகள் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று சுப்பையா ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தியதில் சுப்பையா ரமேசுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அந்த மன வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






